அரசியலை விட்டு வெளியேற தயாராகும் மங்கள.

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை நிறைவிற்காக விசேட நிகழ்வு ஒன்று இவ்வாறு ஏற்பாடு யெ்யப்பட்டிருந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தனது இறுதித் தேர்தலாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எனக்கு 63 வயதாகின்றது. இன்னும் 5 வருடங்கள் சேவை செய்தாலே போதும். நாம் அனைவரும் ஒய்வு பெற வேண்டிய நேரத்தை அறிந்திருக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 7905 Mukadu · All rights reserved · designed by Speed IT net