எலிஸேயின் நிலக்கீழ் அறையில் நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம்!

“ஐரோப்பாவின் வரலாற்றிலும் நம் வாழ்விலும் ஒரு திருப்புமுனை”

போர் குறித்து மக்ரோன்
நாட்டுக்கு விசேட உரை

விளைவுகளில் இருந்து பிரான்ஸை
பாதுகாப்பேன் என்று உறுதி மொழி

?எலிஸேயின் நிலக்கீழ் அறையில்
நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம்!!!

பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இன்று நண்பகல் நாட்டு மக்களுக்கு விசேட
உரை ஒன்றை ஆற்றியுள்ளார். மிக அரி
தான நிகழ்வாக அந்த உரை நாளை
நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவை
களிலும் வாசிக்கப்படவுள்ளது.

போர்க் காலத்தில் நாட்டையும் மக்களை
யும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை
வெளியிடுகின்ற ஓர் உறுதி உரையைப் போன்று அவரது சிற்றுரை அமைந்திருந்
தது. அவரது உரைக்கு முன்பாக நாட்டின்
தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம்
எலிஸே மாளிகையின் ஜூபிட்டர் கட்ட
ளைப் பீடத்தில் (Jupiter command post)
நடைபெற்றது. மாளிகையின் நிலத்தடி
யில் உள்ள போர்க்கால உத்தரவுகள், அணுவாயுதங்களை இயக்குவதற்கான
பணிப்புகளை வழங்கும் கட்டளைப் பீடமே “ஜூபிட்டர் பீடம்” என்று அழைக்கப்படுகி
றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வாயிலில்
போர் மூண்டிருப்பதால் ஒன்றிய நாடுக
ளது தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற
நாடு என்ற வகையில் பிரான்ஸின் முன்
னெடுப்புகள் இந்தப் போர்க்காலப்பகுதி
யில் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதேசமயம் உக்ரைன் நெருக்கடியைத்
தணிப்பதற்காக புடினுடன் பல தடவை
கள் நேரிலும் தொலைபேசி வாயிலாக
வும் சமரச முயற்சிகளை முன்னெடுத்து
வந்த ஒரே தலைவர் மக்ரோன் ஆவார்.

போரில் நேரடியாகத் தலையிடாத – தலை
யிட முடியாத-நிலையில் உள்ள அமெரிக்
கா, ஐரோப்பா உட்பட்ட மேற்குலகம் ரஷ்
யாவுக்கு எதிராக எடுக்கப் போகின்ற நட
வடிக்கைகளைக் காண்பதற்காக உலகம்
காத்திருக்கின்ற இவ் வேளையில்,”பலவீ
னம் இல்லாத ஒரு பதிலடி நிச்சயம்” என்று மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

பல மாத கால ராஜதந்திரப் பேச்சுவார்த்
தைகளுக்குப் பின்னர் போரைத் தொடக்
கியமைக்காக ரஷ்ய அதிபர் மீது கடும் கண்டனத்தை தெரிவித்த மக்ரோன்,
“பிரான்ஸ் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்கி
றது” என்று அறிவித்தார்.

போரைத் தவிர்ப்பதற்கு எல்லாவற்றை
யும் செய்துள்ளோம்.செய்து வருகிறோம்.
ஆனால் புடின் வாக்குறுதிகளை மீறிவிட்
டார். பல தசாப்தங்களாக ஐரோப்பாவில்
நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மை என்பவ
ற்றின் மீது அவர் தாக்குதலைத் தொடுத்
துள்ளார். அவரது போர்ச் செயலுக்கு நாங்கள் பலவீனம் இல்லாமல் பதிலளிப்
போம். இந்த இரவின் நிகழ்வுகள் ஐரோப்
பாவின் வரலாற்றிலும் நம் வாழ்விலும்
ஒரு திருப்புமுனை. இது ஐரோப்பா கண்
டத்தினது புவிசார் அரசியலிலும், எங்கள்
தனிப்பட்ட வாழ்க்கையிலும் விளைவு
களை ஏற்படுத்தும். பிரான்ஸ் அதன் அனைத்து வடிவங்களிலும் உக்ரைனுக்
கான தனது ஆதரவை மேலும் வலுப்படுத்
தும். கடந்த காலப் பிசாசுகள் மீண்டும்
பிறப்பெடுக்கின்ற இந்தக் காலகட்டத்தில்
எங்கள் ஒற்றுமையை விட்டுக் கொடுக்க
முடியாது.இந்த நெருக்கடியின் நேரடியா
னதும் மறைமுகமானதுமான விளைவுக
ளில் இருந்து பிரெஞ்சு மக்களைப் பாது
காப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

-இவ்வாறு மக்ரோன் தனது உரையில்
தெரிவித்தார்.

அதிபர் மக்ரோன் உரையாற்றிய சமயத்
தில் அவருக்குப் பின்புறத்தில் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினது கொடிகளுடன் உக்ரைன் நாட்டின் கொடி
யும் காணப்பட்டது.

இன்றைய பாதுகாப்புச்சபைக்கூட்டத்தில்
உள்துறை, இராணுவம், வெளிவிவகார
அமைச்சர்கள், பிரதமர் உட்பட பாதுகாப்பு
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மக்ரோன் நாளை, முன்னாள் அதிபர்க
ளான நிக்கலஸ் சார்க்கோஷி, பிரான்
ஷுவா ஹொலன்ட் ஆகியோருடனும்
ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Copyright © 8126 Mukadu · All rights reserved · designed by Speed IT net