ஐரோப்பாவின் கவனத்தை ஈர்க்க உக்ரைனின் முயற்சி.

ஈபிள் கோபுரம் தாக்கப்படும்
காட்சியுடன் போலி வீடியோ!

ஐரோப்பாவின் கவனத்தை
ஈர்க்க உக்ரைனின் முயற்சி

பாரிஸ் நகரம் குண்டுத் தாக்குதலுக்கு
இலக்காகுவது போன்ற”டம்மி” காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை உக்ரைன்
வெளியிட்டிருக்கிறது.உக்ரைனின் நா
டாளுமன்றமாகிய ராடா (Rada)வெள்ளி
யன்று தனது ருவீற்றர் தளத்தில் வெளி
யிட்ட அந்தக் காணொலி உலகெங்கும்
சமூகவலைத் தளங்களில் வைரலாகப்
பரவியுள்ளது.

பதற்றத்தை ஏற்படுத்தும் அந்த வீடியோ
உக்ரைனின் நிலைமை மீது ஐரோப்பா
வின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்
ளது.

பாரிஸ் நகரம் மீது போர் விமானங்கள்
குறுக்கும் மறுக்குமாகப் பறக்கின்றன.
இளம் பெண் ஒருவர் ஈபிள் கோபுரம் முன்
பாகப் படம் ஒன்றை எடுக்கிறார். சிறிது
நேரத்தில் கோபுரத்தைக் குண்டுகள் தாக்
குகின்றன. இன்னொரு காட்சியில் பாரிஸ் ஒபேரா அரங்கை (Opéra Garnier)
சூழவுள்ள பகுதிகளைக் குண்டுகள் தாக்
குகின்றன. பின்னணியில் பெண் ஒரு
வர் பிரெஞ்சு மொழியில் ஏதோ பேசுகி
றார். அவரது குரல் குழந்தைகளின் அழு
குரல்களால் சூழப்படுகிறது.

“இது உங்களுக்குக் கவலையளிக்கவில்
லையா?” பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அல்லது பெர்லினில் உள்ள பிரண்டன்பேர்க் கதவு(Brandenburg Gate) மீது இடைவிடாத ரஷ்யக் குண்டு வீச்சு நிகழ்ந்தால் அது உங்களுக்குக் கவலையளிக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்று உக்ரைன், நாளை, அது ஐரோப்பா முழுவதும் நடக்கும். ரஷ்யா நிறுத்தாது”.

-இவ்வாறு ஐரோப்பாவை நோக்கிக்
கேள்விகளை எழுப்புகிறது உக்ரைன்
நாடாளுமன்றத்தின் வீடியோ.

உக்ரைன் மீது அதிபர் புடினால் கடந்த பெப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட
படையெடுப்பு தலைநகர் கீவ் வரை முன்
னேறியுள்ளது. தலைநகரம் ரஷ்யப்படை
களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.மிகப்
பெரும் மனிதப் பேரவலம் அங்கு தோன்
றியுள்ளது.ரஷ்யாவின் வான் தாக்குதல்
களைத் தடுப்பதற்காக நாட்டுக்கு மேலே
வான் பறப்புத் தடை வலயம் ஒன்றை
அறிவிக்குமாறு உக்ரைன் மன்றாடிக்
கேட்டு வருகிறது. அவ்வாறு செய்வது
போரில் நேட்டோவின் நேரடியான தலை
யீடாக மாறிவிடும். அது மூன்றாம் உலகப்
போருக்கு வழிவகுத்துவிடும் என்று கூறி
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்
உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்து
விட்டன.

இந்தப் பின்னணியிலேயே விரைந்து
உதவி கோரும் விதமாக இவ்வாறு ஒரு
வீடியோவை உக்ரைன் நாடாளுமன்றம்
வெளியிட்டிருக்கிறது.

உக்ரைனின் தலைநகர் உட்பட பல பகுதி
களின் மீதும் இன்று ஞாயிற்றுக்கிழமை
காலை முதல் ரஷ்யப் படைகள் தீவிர
தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. உக்
ரைனின் மேற்குப் பகுதியில் – போலந்து
எல்லைக்கு நெருக்கமாக அமைந்துள்ள
லிவிவ் பிராந்தியத்தில் (Lviv region) அமெ
ரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினர்
இணைந்த இராணுவப் பயிற்சி மையத்
தின் மீது இன்று காலை சுமார் எட்டு ஏவு
கணைகள் தாக்கியுள்ளன.சேதவிவரங்
கள் எதுவும் தெரியவரவில்லை.

இந்தப் பகுதி ஊடாகவே பெரும் எடுப்பில்
அகதிகள் போலந்துக்குள் வெளியேறு
கின்றனர். உக்ரைனுக்கான அமெரிக்க
போர்த் தளபாட உதவிகளும் அந்த வழி
யூடாகவே வழங்கப்படுகின்றன. அமெரிக்
காவின் ஆயுத விநியோகங்கள் போர்
இலக்குகளாகக் கருதப்பட்டு அதன் மீது
தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா
எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்
தக்கது.

(*படங்கள் :உக்ரைனின் போலி வீடியோ
காட்சிகள். Fake video footage of Ukraine)

– பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net