ரஷ்யா போரை நிறுத்தினால் உக்ரைன் நடுநிலை பேணும்!

துருக்கிப் பேச்சு முன்னேற்றம்!
ரஷ்யா போரை நிறுத்தினால்
உக்ரைன் நடுநிலை பேணும்!

நேட்டோவில் சேராது ஆனால்
ஐ. ஒன்றியத்தில் இணையும்

உக்ரைன் – ரஷ்யா சமாதானக் குழுக்
கள் இடையே துருக்கியில் இன்று நடை
பெற்ற நேரடிப் பேச்சுக்கள் குறிப்பிடக்
கூடிய முன்னேற்றத்தை எட்டியிருப்ப
தாக அங்காராவில் அந்நாட்டின் வெளி
விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா போரை நிறுத்தித் தனது படை
களை முற்றாக வெளியேற்றுமானால்
அதற்குத் தனது தரப்பு விட்டுக்கொடுப்
பாக நேட்டோவில் இணையும் விருப்பத்
தை உக்ரைன் கைவிடும். அத்துடன்
டொன்பாஸ் பிராந்தியத்தைத் தற்காலி
கமாகத் தனது பிடியில் இருந்து விலக்கி
விடவும் அது இணக்கம் தெரிவித்துள்
ளது.

பேச்சு மேசையில் உக்ரைன் தரப்பு முன்
வைத்த திட்டங்கள் வருமாறு :

?பாதுகாப்பு உத்தரவாதம் :சட்ட ரீதியாக
உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
உத்தரவாதம் ஒன்றை மேற்கு நாடுகளி
டம் இருந்து உக்ரைன் எதிர்பார்க்கிறது.
நேட்டோ வழங்குகின்ற பாதுகாப்புக்கு
நிகரான அல்லது அதைவிடச் சிறந்ததாக
அந்த உத்தரவாதம் அமைய வேண்டும்.

நாங்கள் சர்வதேச பொறிமுறை ஒன்று
டன் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தை
எதிர்பார்க்கிறோம். உத்தரவாத நாடுகள்
நேட்டோ உடன்படிக்கையின் சரத்து 5
போன்று விரைந்து பாதுகாப்பு உதவி அளிக்கும் விதமான விதிகளோடு அது
அமையவேண்டும் – என்று உக்ரைன்
தரப்புப் பிரதிநிதி கூறியிருக்கிறார்.

?நேட்டோ :பாதுகாப்பு உத்தரவாதம்
நடைமுறைக்கு வந்தவுடன் நேட்டோவில்
இணைவது என்ற தனது அபிலாசையை
உக்ரைன் கைவிடும்.

?பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்த பிறகு தனது எல்லைக்குள் வெளிநாட்டு
படைத் தளங்கள் எதனையும் உக்ரைன்
வைத்திருக்க மாட்டாது.

?பாதுகாப்பு உத்தரவாத உடன்படிக்கை
உக்ரைன் ஜரோப்பிய ஒன்றியத்தில்
இணைவதைக் கட்டுப்படுத்தாது என்பது
கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

உக்ரைன் தரப்பின் இந்த யோசனைகள்
அடங்கிய திட்டத்தை ரஷ்யா சாதகமாகப்
பரிசீலிக்க இணங்கியுள்ளது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இன்றைய
பேச்சுக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற ஒரு சாதக சமிக்ஞையாக
தலைநகர் கீவின் சுற்றுவட்டாரம் உட்பட
உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்யா
வின் போர் நடவடிக்கைகள் தணிக்கப்பட
வுள்ளன என்று ரஷ்யப் பிரதிநிதிஅறிவித்
துள்ளார்.

இதேவேளை, அதிபர் மக்ரோன் இன்று
மாலை மீண்டும் ஒரு தடவை புடினுடன்
தொலைபேசி வழியே பேசினார். மரியு
போல் நகரில் இருந்து மக்களை வெளி
யேற்றுவதற்கான சர்வதேச மீட்பு முயற்சி
க்குப் புடினின் இணக்கத்தைப் பெறுவ
தற்காக மக்ரோன் அவருடன் தொடர்பு கொண்டார்.போரின் தற்போதைய கட்
டத்தில் அவ்வாறான ஒரு மீட்பு சாத்திய
மில்லை என்று புடின் கூறியுள்ளார்
என எலிஸே மாளிகை பின்னர் தெரிவித்
துள்ளது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net