பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை!

பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை!
திறந்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு

பாரிஸ் நொர்த் டாம் மாதா கோவிலின் நிலத்தடியில் இருந்து புராதன கற்பேழை
ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருக்கி
றது. 2019 இல் தீக்கிரையாகிய மாதா தேவாலயத்தின் கூரை உட்பட அதன்
கட்டுமானங்களைப் புனரமைக்கும் பணி
கள் தற்சமயம் அங்கு நடைபெற்று வரு
கின்றன. அதன் போது தேவாலயத்தின்
உள்ளே ஒரு பகுதியில் தரை தோண்டப்
பட்ட சமயம் சுமார் இருபது மீற்றர் ஆழத்
தில் கல்லினாலான புராதன சவப்பேழை
(sarcophagus) ஒன்று கண்டுபிடிக்கப்பட்
டது.

மனித உருவிலான – நன்கு பாதுகாக்கப்
பட்ட-அந்த மர்மப் பேழை 14 ஆம் நூற்றா
ண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும்
என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
கள் நம்புகின்றனர்.அவர்கள் பேழையை
திறக்காமலேயே அதன் உள்ளே இருக்கி
ன்ற பொருள்களை என்டோஸ்கோபிக் கமரா (endoscopic camera) மூலம் ஆய்வு
செய்துள்ளனர். எலும்புக் கூட்டின் மேற்
பகுதி, இலைகளாலான தலையணை,
துணி மற்றும் சில பொருள்களை உள்ளே
அடையாளம் கண்டுள்ளனர்.பாதுகாப்
பான இடம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்
கின்ற அந்தப் பேழை விரைவில் தென் மேற்கு நகரமாகிய துளுசில் (Toulouse)
அமைந்துள்ள தேசிய தடயவியல் மருத்
துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்
பட்டுத் திறந்து பரிசோதிக்கப்படவிருப்ப
தாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருடையது என்ற அடையாளம் தெரி
யாத அந்த மனித எச்சம் எவ்வாறு, ஏன்
நொர்த் டாம் தேவாலயத்தின் அமைவி
டத்தின் கீழ் புதைக்கப்பட்டது? கடந்த பல
நூற்றாண்டுகளாக அது அங்கேயே இரு
ந்துவந்ததா,அல்லது அங்கு மீளப் புதைக்
கப்பட்டதா?

அதன் அடக்க வடிவமைப்பு முறை, அதன்
காலம், இறந்தவரது சமூக நிலை என்பன
சொல்கின்ற செய்தி என்னவாக இருக்
கும்?

இவை போன்ற பல கேள்விகளை எழுப்
கியிருக்கின்ற அந்தக் கற்பேழை தொடர்
பான புதிர்களை அறிவதற்காக பிரான்
ஸின் கத்தோலிக்கர்கள் உட்பட நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்
ளனர்.

பாரிஸின் உலகப் புகழ் பெற்ற சின்னங்
களில் ஒன்றாகிய – 12 ஆம் நூற்றாண்
டைச் சேர்ந்த (Gothic)-நொர்த் டாம் மாதா தேவாலயத்தின் உயர்ந்த மரக் கூம்புக் கூரை உட்பட அதன் பெரும் பகுதிகள் தீயினால் எரிந்து அழிவுண்டமை தெரிந்
ததே.

— குமாரதாஸன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net