அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் சுதந்திர கட்சி மற்றும் பெரமுன கட்சிகளின் தலைவர்கள் ‘கை’ அல்லது ‘மொட்டு’ தவிர வேறு ஒரு சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியை உருவாக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் முழு ஆதரவு இருந்தால் ஜனாதிபதி சிறிசேனவை ஆதரிப்பேன் என ஜனாதிபதியின் சகோதரனான டட்லி சிறிசேனவிடம் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என்றும் ஸ்ரீ.ல.சு.க.வின் 4.2 மில்லியன் வாக்குகள் மற்றும் பொதுஜன பெரமுனவின் 1.5 மில்லியன் வாக்குகள் ஆகியவற்றுடன் அவரது வெற்றி நிச்சயம் எனவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் விசாரிவில் நடக்க கூடும் என்று ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 6540 Mukadu · All rights reserved · designed by Speed IT net