புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி!

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி!

புதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசியலமைப்பு திருத்தம் நாட்டைப் பிரிக்கும் முயற்சியாகும். ஒரு சிலர் இதனைத் திருத்தம் என்கிறனர். ஒருசிலர் சட்டமூல வரைவு என்கிறனர். ஒரு சிலர் அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர்.

ஒவ்வொருவராக தயாரித்த நான்கு அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைக்கான ஆரம்பத்தை வைத்துள்ளனர்.

அவர்கள் அதில் பிரச்சினை இல்லை என்று கூறிய நிலையில் அதனை வாசித்து பார்க்கும் போதுதான் பிரச்சினைகள் தெரிகின்றன.

இந்த நாடாளுமன்றத்திற்கு புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. குறைந்தது 113 கூட இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © 1694 Mukadu · All rights reserved · designed by Speed IT net