பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழர்களின் பெருமளவிலான நிலங்கள் கபளீகரம் செய்யப்படாமைக்கு மலையக மக்களே காரமென்றும், எனவே மலையக மக்களின் போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.