வாழைச்சேனையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

வாழைச்சேனையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும், வந்தாறுமூலை பிரதேசத்தில் வைத்து இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த கல்வீச்சு தாக்குதலால் பேருந்தின் முன்னாலுள்ள கண்ணாடி சேதமடைந்ததுடன், பேருந்து சாரதி மற்றும் பயணிகள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 9391 Mukadu · All rights reserved · designed by Speed IT net