கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் பலி!
கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.