சிகரெட் பிரியர்களுக்கு விசேட செய்தி!

சிகரெட் பிரியர்களுக்கு விசேட செய்தி!

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிகரெட்களுக்கு தேசிய கட்டுமான வரி விதிக்கப்படும் எனவும் பீடி இலைகள் இறக்குமதிக்கான செஸ் வரி 3,500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Copyright © 0430 Mukadu · All rights reserved · designed by Speed IT net