சோள பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவித்தல்.

சோள பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவித்தல்.

சோள பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிக்குமாறு விவசாய திணைக்களம், விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய பெரும்போகத்திற்காக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலத்தில் சோள பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு அந்த திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

சோள பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட படைப்புழுவின் தாக்கம் காரணமாக, கடந்த சில காலமாக குறித்த பயிர்ச்செய்கை மறு அறிவித்தல்வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1860 Mukadu · All rights reserved · designed by Speed IT net