ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் தொடக்கம் வழங்க போவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓய்வூதிய கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 1600 கோடி ரூபாவை செலவிடுகிறது.

எனினும் இம்முறை 1700 கோடி ரூபா அதற்காக ஒதுக்கப்படும். மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பிரதேச செயலகங்களுடன் சேர்ந்து புதிய கொடுப்பனவு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற சகலருக்கும் புதிய கொடுப்பனவு கிடைக்கும்.

இதன்மூலம் ஐந்து இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரை நன்மை பெறுவார்கள் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 3377 Mukadu · All rights reserved · designed by Speed IT net