ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் ; 10 பேர் பலி!

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி!

நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி குறித்த குண்டு வெடிப்பு சம்பவமானது கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இதிலும் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இடம்பெற்ற இந்த 6 குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 160 க்கும் மேற்பட்டோர் படுகயாமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் மீட்புப் படையினரும் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், படுகயாமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளத்தானால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net