விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல்.

விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல்.

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

இதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும், 24 மணித்தியாலயங்களும் நடைமுறையில் உள்ள தொலைபேசி மத்திய நிலையம் ஒன்றை விசாரணை நடவடிக்கைகளுக்காக தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 7687 Mukadu · All rights reserved · designed by Speed IT net