குண்டு துளைக்காத வாகனத்தினை நிராகரித்த ஆண்டகை!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார்.
மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
மேலும் தனக்கு இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானது நாட்டு மக்களது பாதுகாப்பே என சுட்டிக்காட்டிய அவர் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.