ஐ.எஸ் கும்பலினால் விநியோகிக்கப்பட்டுள்ள ஆபத்தான மாத்திரைகள்!

ஐ.எஸ் கும்பலினால் விநியோகிக்கப்பட்டுள்ள ஆபத்தான மாத்திரைகள்!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் அதில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய ஐ.எஸ் பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்து இந்த மாத்திரைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

5 கருகலைப்பு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கொழும்பில் மீட்கப்பட்ட இந்த மாத்திரைகள் சுமார் 40 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை குடிக்கும் பெண்களுக்கு வாழ் நாள் முழுவதும் குழந்தை பெற முடியாத நிலை ஏற்படும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 9891 Mukadu · All rights reserved · designed by Speed IT net