பிளாஸ்டிக் குண்டுகளுடன் இருவர் கைது!

பிளாஸ்டிக் குண்டுகளுடன் இருவர் கைது!

மதுகம – வெலிபென்ன, ஹித்ரா மாவத்தையின் கல்லஸ்ஸ பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களுடன் இரண்டு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 7 மணியளவில் நடத்திய தேடுதலில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட மூன்று குண்டுகள் மற்றும் அமோனியம் நைத்ரேட் அடங்கிய பொதி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த குண்டுகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெலிபென்ன பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 0151 Mukadu · All rights reserved · designed by Speed IT net