ஜெர்மன் ஹோட்டலில் அம்பு தாக்கிய 3 சடலங்கள் மீட்பு

ஜெர்மன் ஹோட்டலில் அம்பு தாக்கிய 3 சடலங்கள் மீட்பு

ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் உயிரிழந்து காணப்பட்டனர்.

மூவரும் ஜெர்மானியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளனர். அவர்கள் மூவரும் இணைந்து அந்த ஹோட்டல் அறையை வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்துள்ளனர்.

எனினும் ஹோட்டலில் அமைதி நிலவியதாக அந்த ஹோட்டல் தங்கி இருந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரிய எல்லைப் பகுதிக்கு அருகே, பஸ்ஸாவ் எனும் நகரின் நதிக்கரையோர ஹோட்டலில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாய்த் தெரியவில்லை என்று பொலிஸ் தெரிவித்தது.

Copyright © 9018 Mukadu · All rights reserved · designed by Speed IT net