கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார்!

கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார்!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கமல்ஹாசனின் சர்ச்சை கருத்து எதிராக பிரதமர் நரேந்திரமோடி சரியான கருத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என குறிப்பிடும் தமிழிசை, இந்த இடைத்தேர்தலில் மகாத்மா காந்தி குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net