மீண்டும் நானே பிரதமராக வருவேன்!

மீண்டும் நானே பிரதமராக வருவேன்!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் நானே பிரதமராக வருவேன் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி கூட்டம் இதுவாகும் என தெரிவித்த மோடி, என்னுடைய அடுத்த ஆட்சியில் புதிய வளர்ச்சி திட்டங்களுடன் உங்களை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் மேற்கொண்ட தேர்தல் பிரசார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்பே வெற்றியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி ஏழாம் கட்ட தேர்தல் இடம்பெறவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0031 Mukadu · All rights reserved · designed by Speed IT net