அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்!

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்!

அம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 09.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net