கொழும்பில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

கொழும்பில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொத்தொட்டுவ, முல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 40 வயதான நபர் என பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 1707 Mukadu · All rights reserved · designed by Speed IT net