பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு பெற்றோர் அவசியமில்லை!

பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரை அழைக்க வேண்டிய அவசியமில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச பாடசாலைகள் உட்பட அனைத்துப் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆகையால், பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரை அழைக்க வேண்டிய அவசியமில்லை எனவும், தெரிவித்துள்ளது.

Copyright © 6765 Mukadu · All rights reserved · designed by Speed IT net