கொழும்பில் இரு பெண்கள் உட்பட ஐவர் கைது!

கொழும்பில் இரு பெண்கள் உட்பட ஐவர் கைது!

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரு பெண்கள் உட்பட ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் வைத்தே குறித்த ஐவரும் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 650 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 7915 Mukadu · All rights reserved · designed by Speed IT net