கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவுகள் இல்லை!

கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவுகள் இல்லை!

கூட்டு எதிர்க்கட்சி எப்போதும் பிளவுப்படாது என தற்போதைய பிதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொஸ்கொட பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறினாலும் அப்படியான எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை கண்டிக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த கண்டிப்பதற்கு எதுவுமில்லை.

இதேவேளை, எமது கட்சியில் இருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்திருக்க வேண்டும்.

எனினும் குமார வெல்கம கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து விலகி செல்வதாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை என மகிந்த கூறியுள்ளார்.

Copyright © 8211 Mukadu · All rights reserved · designed by Speed IT net