“நெருக்கடிக்கு உள்ளாக்கினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்ய சென்று விடுவேன்”

“நெருக்கடிக்கு உள்ளாக்கினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொலொன்னறுவை பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்”

“தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொலொன்னறுவை விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சிவசப்பட்டு கூறினார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.மு தலைவர்களுடனான சந்திப்பின் போது உணர்ச்சிவசப்பட்ட ஜனாதிபதி,

“தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தனது பொலொன்னறுவை பண்ணைக்கு செல்வேன் என கூறினார் ” என்று தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 1803 Mukadu · All rights reserved · designed by Speed IT net