ரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்!

ரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார்.

நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்கள்.

இந்நிலையில், நாட்டின் இறைமையை மதித்து, மேற்கத்தேய நாடுகளின் நலன் சாராது அவர் நடந்துகொள்வார் என தான் நம்புவதாகவும் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net