//anjeng webadmin – Mukadu https://www.mukadu.com Fri, 28 Nov 2025 17:32:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 தமிழ்தேசிய நினைவெழிச்சி நாளில் தமிழ்கலை வடிவங்கள் எங்கே? https://www.mukadu.com/2025/11/28/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ Fri, 28 Nov 2025 17:32:01 +0000 https://www.mukadu.com/?p=26503 தமிழ்தேசிய நினைவெழிச்சி நாளில் தமிழ்கலை வடிவங்கள் எங்கே?

தமிழ்தேசிய நினைவெழிச்சி நாளில் தமிழ்கலை வடிவங்கள் எங்கே?
28-10-2025
ப.பார்தீ

புலம்பெயர் தேதங்களில் தமிழ்தேசிய நினைவெழிச்சிநாளில் (ஓரிரண்டு கலை வடிவம் தாண்டி )புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் கலைவடிவங்களைப்பற்றி நாம் பேசியாகவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.
மக்கள் கலை என்பது ஒரு சமூகத்தின் நாளாந்த வாழ்வியல், தொன்மம் தொடர்ச்சி, நம்பிக்கை, தொழில், உணர்வு ஆகியவற்றிலிருந்து இயல்பாக உருவாகும் வடிவம். இதுமக்களின் கூட்டு அனுபவத்தின் வெளிப்பாடு. எளிமையான வடிவில் உருவானதும், தலைமுறைகளாக பரவுவதும் இதன் சிறப்பு. பாடல், நடனம், ஓவியம், கைவினை, கதையாடல் போன்ற வடிவங்களில் மக்கள் கலை உயிரோடு இன்றும் வாழ்கிறது.

பறை (இசையோடு இசையில்லாமல் நாட்டார் பாடல் வடிவங்கள்)ஒருகாலத்தில் எங்கள் கிராமங்களின் இரத்த ஓட்டம். போர்க்காலத்தில் அது எச்சரிக்கைத் தாளமாயும், சடங்குகளில் வாழ்வு இறப்பு வட்டாரத்தின் விடுதலை ஆற்றுப்படுத்தல் மொழியாகவும் இருந்தது. இன்று அந்தத் தாளம் தேசிய நினைவில் ஒலிக்காதபோது, அதன் அரசியல் இடம்பிடிப்பு சக்தி குறைந்து வருகிறது. பறையென்பது வெறும் கருவி அல்ல அது ஒடுக்கப்பட்டோரின் போராட்ட வரலாறு. அதை நினைவு நாள்களில் புறக்கணிப்பது, தமிழ்த் தேசியத்தின் வரலாற்றையே காயமாக்கி நிழல் செய்யும்.

கூத்து, (கோலாட்டம் கும்மி)அடிப்படையில் மக்கள் நீதிமன்றம். கிராமம் முழுவதும் கலந்துரையாடும் மேடை. அங்கு தெய்வங்களும் அறமும் மனிதர்களின் குரலில் மீள எழுதப்பட்டன. வன்னி, கிழக்கு, யாழ் ஆகிய பகுதிகளில் கூத்து சமூக சிதைவுகளுக்கு எதிரான விமர்சன ஆற்றலாக இருந்தது. ஆனால் இன்றைய நினைவு மேடைகளில் கூத்து காணாமல் போகிறது. சர்வதேச வடிவமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வுகளில் இந்த மக்கள் கலைகளின் உடல் மொழி சேர இடமில்லையா?அதன் சிதைவு என்பது மக்களின் வாழ்வை வலியை வெளிப்படச் சொல்லும் வாய்ப்பின் சிதைவும்தான்.

கதைகள் (வில்லுப்பாட்டு)சொல்வது கேட்பது முன்பிருந்தது கிராமகளில் இரவை மெல்ல திறந்து வெளிச்சமாக்கும் குரலாக. வீரப்பாடல்கள், பெண்விடுதலை கதைகள், மண்ணின் ஞானத்தை சொல்லும் மென்மையான பாட்டுகள் இவை அனைத்தும் தேசிய நினைவு இடத்திலிருந்து தவிர்க்கப்படும்போது, தமிழரின் மனவளர்ச்சி பொக்கிஷமே அலட்சியப்படுத்தப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது தமிழ்கதைகள் ஒவ்வொன்றும் அடிமைச் சூழலை மறுத்த எழுச்சியின் செறிவான வடிவம். குழந்தைகளுக்கு தமிழுணர்வை அறந்தைகடத்தும் அதை தேசிய மேடைகளில் பயன்படுத்தாமை, கலாசாரச் சிதைவின் வேகத்தைக் கூட்டுவதாக உணரமுடிகிறது.

நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் மண்பாண்டக் கைவினை, குச்சிப் பொருட்கள், பனைப் பண்பாடு தமிழரின் மண்ணின் வேர்களைச் சான்றிடும் சிற்பங்கள் ஓவியங்கள். நினைவு நிகழ்வுகளில் இடம் பெறாமல் போகும்போது, கலை பிரிவில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் வாழ்வியல் வரலாற்றை கடத்தும் அழிவின் சுவர்களைத் தொடுகின்றன. ஒரு மக்கள் தேசிய நினைவில் தங்கள் தொழிலின் தடத்தை காட்சிப்படுத்தாதபோது , அந்தத் தொழில் பண்பாடு தலைமுறையால் அறிய முடியமலே போகிறது .

ஏன் இந்தப் புறக்கணிப்பு?அல்லது ஏன் தமிழ்தேசியவுணர்வுசார்ந்து இந்த பொருப்பின்மை?

நினைவு நிகழ்வுகள் சர்வதேச பார்வையின் கீழ் மிக ஒழுங்கான, ஒலி–ஒளி சார்ந்த, எங்கள் ஆதி வடவங்கள் தணிக்கப்பட்ட ஒரு வடிவமைப்பில் நிறுத்தப்படுவதால், மக்கள் கலைகளின் கூச்சலான உடல் நினைவுகள் அங்கு அடக்கப்படுகின்றன. தேசியம் ஒரு அழகியல் வடிவம் அல்ல; அது ஒரு மக்கள் உணர்ச்சி வடிவம். ஆனால் இன்று நினைவு மேடைகள் அந்த உணர்ச்சியில் இருந்து பிரிக்கப்பட்டதுபோல தோன்றுகிறது. இது எதிர்காலத்தில் “தமிழ் மொழி தேசிய கலாசாரம்” என்ற கருத்தையே ஒரே மாதிரிப் காட்சியாக்கிவிட கூடிம் விடக்கூடும்.

ஈழத் தமிழர் வரலாறு, சிதைந்து இழைந்து மீண்டும் மீண்டுமெழும் ஓளி. அதன் வெளிச்சமாய் ஒலிக்கும் முதற்பாட்டுகள் பறைத்தாளம், கூத்து மெய்யாட்டம், வாழ்வியல் கதைகள் இவை அனைத்தும் ஒருகாலத்தில் பொதுநினைவின் முதுகெலும்பாக இருந்தன. தேசிய காயங்களையும் எதிர்ப்பையும் தாங்கிய இக் கலைவடிவங்கள் இன்று “நினைவெளிச்சிநாள்” பீடங்களில் காட்டுப்பூக்கள் போல தள்ளிவைக்கப்பட்டு; மெலிந்தும் மறைந்தும் வருகின்றன. இந்தக் கலைகள் தங்கள் உயிர் பெற்று வீறுகொண்டது தமிழ் மக்களின் சமூகச் சுழற்சியிலும் அரசியல் அடையாளங்களிலும் தான். ஆனால் இன்று நாம் அமைக்கும் நினைவு மேடைகளில் அவை பங்கேற்காதபடியால், தமிழ் தேசிய அடையாள உணர்வுத் தாய்மண்ணிலிருந்து மெதுவாகப் பிரிக்கப்படுகின்றன.இளந்தலைமுறைக்கான எடுத்துகூறல் கேள்வியாக்கப்பட்டுவிட்டது.

]]>
மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் பாடல் போட்டி – ஒரு பார்வை https://www.mukadu.com/2025/11/12/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b2/ Wed, 12 Nov 2025 17:03:39 +0000 https://www.mukadu.com/?p=26497 மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் பாடல் போட்டி – ஒரு பார்வை

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் பாடல் போட்டி 08/11/2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பம் பொதுச்சுடர் ஏற்றியும் அமைதி வணக்கத்துடனும் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் பதினொன்றுக்கும் மேற்பட்ட இளந்தலைமுறைப் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து அரங்கத்துக்கு எடுத்துவருவது என்பது கனத்த செயற்பாடு. அதனை எப்போதும் மதிப்பதோடு அணுகவேண்டும். ஆனால் ஒரு நிகழ்வை வடிவமைக்கும் பொழுது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது — நாம் என்ன நிகழ்வு செய்கிறோம், யாருக்காக செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதைக் கற்றறிந்து ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும்.

பாடல் போட்டி நிகழ்ச்சியை இசையோடு கோர்த்து நிகழ்த்த முற்படும்போது, இசையின் அடித்தளம் — பாடகர்களின் குரல் நிலை, இசைக்கருவிகளின் ஒத்திசைவு, உணர்ச்சி வெளிப்பாடு, அழகியல் நுட்பம் ஆகியவை — நிகழ்வில் பேணப்பட வேண்டும். இவைகளில் மிகமிக அவசியமானது, பாடகர்களில் குரல் ஒத்திசைவுக்கேற்ப சுருதி வடிவமைத்தல். அப்படி சுருதி தவறும் சந்தர்ப்பத்தில், பாடகர் தனது பாடும் திறனில் மாற்றங்களை ஏற்படுத்தி சுருதிக்குச் சேரவேண்டும். இரு — பாடலின் உயிரை சிதைக்காமல். பாடலில் குரலும் சுருதியும் ஒரு தண்டவாளத்தைப் போன்று சமாந்தரமாக பயணிக்க வேண்டும்.

08/11/2025 சனிக்கிழமை அன்று நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழந்தைகள் பயிற்சி பெற்று பாடவிருந்த பாடல்களுக்கான சரியான இசை ஏற்பாட்டுடன் வரவில்லை. அவர்கள் பாடலுக்கேற்ப ஒரு வகை பின்னணி இசையையே செய்து கொண்டிருந்தார்கள். அது பாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் பாடும் திறனை இடையூறு செய்தது. அப்போது நடுவராக இருந்த தில்லை சிவம் எழுந்து, “கரோக்கே இசையில் பாடப் பழகியிருப்பீர்கள்; அந்த இசையை இப்போது வழங்குவது கடினம். பிள்ளைகளை பாடச் சொல்லுங்கள், அந்த வேகத்துக்கு இசை வரும், அதை கணக்கில் எடுக்க வேண்டாம்” என்றார்.

இவைகள் இல்லாமல் பாடுவதன் மூலம் உங்கள் குழந்தைகளின் திறன் வெளிப்படும், திரண்படும் என்றார். சபையிலிருந்த அனைத்து பெற்றோரும் பிள்ளைகளை “இசையை கவனிக்காமல் பாடுங்கள்” என்றார்கள். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திடீரென இப்படியான ஒரு மாறுதலை செய்தால், போட்டிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், புலம்பெயர் நாடுகளில் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவே பெரும் திண்டாட்டம். இதில் பாடலை சுருதியோடு மனனம் செய்துவிட்டு, குழந்தைகள் பாட முடியாமல் திண்டாடினார்கள் என்பதே மெய்யிலும்மெய்.

தில்லை சிவம் ஒரு இசையமைப்பாளர். சுருதியும் தாளமும் குரல் ஒருமையும் இடையிலான ஒருமைப்பாட்டை உணராதவரா? பெற்றோரை, பிள்ளைகளை கலை தெரியாதவர் போல் கதைத்தது வருந்தத்தக்கது.

ஏற்பாட்டாளர் கவனத்திற்கு: “தமிழர் கலை பண்பாட்டு” என்பதே பெரும் விழுமியம். இன்றளவில் கீழடி தொன்மையிலிருந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. எமது தேசியத் தலைவர் இவற்றை எல்லாம் சுமந்த ஒரு தமிழர் தாய்நிலத்திற்காக போராடினார்,
“மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும் பொழுதே, தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது, பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன. தேசிய நாகரிகமும் உன்னதம் பெறுகின்றது”(வே.பி)
புலம்பெயர் நிலங்களில் நடக்கும் இத்தகைய கலா நிகழ்வுகள், தமிழ்மொழியும் பண்பாடும் உயிர்வாழும் அரங்கங்களாகவே விளங்குகின்றன. எனவே, அவை வடிவமைக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் நுணுக்கம், மதிப்பு, பொறுப்பு ஆகியவை இணைந்திருக்க வேண்டும். சிறுவர்களின் குரலில் பிறக்கும் ஒவ்வொரு சுருதியும், தாய்மொழியின் உயிராக ஒலிக்கட்டும் அதுவே நமது உண்மையான வெற்றி.
08-11-2025
ப.பார்தீ

]]>
பாரிஸ் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிஸில் “ஆழிக்கிழிஞ்சல” https://www.mukadu.com/2025/11/10/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/ Mon, 10 Nov 2025 17:00:19 +0000 https://www.mukadu.com/?p=26491

பாரிஸ் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிஸில் “ஆழிக்கிழிஞ்சல”

முற்குறிப்பு
“இரத்தக்காட்சிகள் கொடூர கொலைகள் வெளிப்படையாக காட்டும்பொழுது வயது எல்லையை குறிப்பிட்டு பார்வையாளர்களை உள்வாங்குங்கள் ஆழிக்கிழிஞ்சல் திரைப்படம் குழந்தைகள் மனவளம் குன்றியவர் கற்பிணிப்பெண்கள் முதியவர் பார்க்க தடையான படமே“
குற்ற விசாரனை திகில் படம் எடுக்கும்போது, பெரும்பாலான தமிழ் திரைப்பட இயக்குணர்கள் அதின் வெளிப்புற நரம்பை மட்டும்
தொடுகின்றனர் பயம் வருகிறதா? இசை வேலை செய்கிறதா? முடிவில் திருப்பம் இருக்கிறதா வென்று.
ஆனால் அந்த வெளிப்புறத்தின் அடியில் நேரடியான விடையங்களை தாண்டி ஒரு மெல்லிய உள்அதிர்வலை இருக்கிறது.அதைப் பெரும்பாலான இயக்குணர்கள் கவனிக்க தவறி விடுகின்றார்கள் திகில் என்பது இரத்தமும் கொடுறமான ஆயுதப்பயன்பாடும் கொண்ட வெறும் காட்சியல்ல, அது ஒரு மனஅழுத்தத்தின் அரசியல். அது யாரை பயமுறுத்துகிறது என்பதே அதன் நெறி. அது படைப்பின் தாக்கத்தால் ஒடுக்கப்பட்ட நினைவுகளின் துடிப்பு.

ஒலியும் அமைதியும் திகிலின் இரு முகங்கள்.
சில நேரங்களில் குரல் இல்லாமையே அதிகமான சத்தமாகி விடுகிறது.அந்த அமைதி ஒரு ஒடுக்கப்பட்ட உணர்வை தூண்டும் உண்மையின் தன்னிச்சை மொழி.
அந்த அமைதியை உருவாக்கத்தெரிந்தால் , திகில் திரைப்படம் பேசத் தொடங்கும்.

குற்றவிசாரணை திகிலில் திரைப்படங்களில் நேரம் ஒரு மறைமுகக் கதாபாத்திரமாக இயங்கவேண்டும்
அது சில நேரங்களில் மெல்ல நகரவேண்டும், சில சமயம் நின்றுவிடவும் வேண்டும்.
அந்த நின்ற நொடியில் தான் பார்வையாளன் தன் மூச்சை அடக்கிக்கொள்கிறான் உணர்சியின் உச்சத்திற்கு போகின்றான். அது மனஅழுத்தத்தின் அளவாக பார்வையாளனுக்குள் வியாபிக்கின்றது குற்றவிசாரனை திகிலின் மர்மம் ஒரு நெறிவினாவும் கூட.
பார்வையாளன் பயத்தை அனுபவிக்கின்றானா அல்லது அதை நுகர்கின்றானா?
ஒரு படம் திகிலூட்டுவது மட்டுமல்ல,
அது பயம் உண்டாக்கும் பொறுப்பையும் சுமக்கிறது.
ஏனெனில் ஒவ்வொரு பயத்திற்கும் அதன் பின்னால் ஒரு மௌனமான மனித மன வரலாறு இருக்கிறது.
உண்மையான குற்ற விசாரனைதிகில் படம் வெளியில் நிகழ்வதல்ல,படம்பார்பதனுடாக
அது பார்வையாணன் உள்மன காட்சியகத்தில் நிகழவேண்டும் அந்த நிழல்கள், அந்த மூச்சுகள்,
அனைத்தும் மனதின் மறைந்த கோப்புகளைத் திறக்கவேண்டும்.

2025 நவம்பர் 9ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, பிரான்ஸ் ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தின் திரை வெளியீடாக “ஆழிக்கிளிஞ்சல்” (குற்ற விசாரனை திகில் படம் திரைப்படம்) பிரான்ஸில் உள்ள MEGARAMA CINEMA (4 avenue de la Longue Bertrane, 92390 Villeneuve-La-Garenne) திரையரங்கில் நூறு முதல் நூற்று இருபது வரை உள்ள பார்வையாளர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.

“ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம் பெண் தலைமைப் பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குற்றவிசாரணைத் திகில் திரைப்படமாகும். திரைப்பட விளம்பரக் குறிப்பில் “எழுத்தோட்டத்தில் ஈழ சினிமா கனவுகளை நிறைவேற்றும் முயற்சி”என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
ஈழச் சினிமாவின் வரலாற்றில் இத்தகைய “கனவு நிறைவேற்றும் முயற்சி” என்ற குறிப்பு ஏன் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்பது ஒரு கேள்வியாகும்.
இது பார்வையாளர்களின் குற்றமா? அல்லது படைப்பாளர்களின் படைப்பாற்றல் மற்றும் வீரியமின்மையா? ஆனால் ஆழிக்கிளிஞ்சல் திரைப்படக்குழு இத்தேடலை நெருங்கியவர்களாகவள காணப்பட்டார்கள்.

குற்றவிசாரணைத் திகில் திரைப்படங்களில், ஒவ்வொரு கணத்திலும் பார்வையாளர்களின் ஊகங்களை சிதைத்து, முடிவுவரை அவர்களை சுவாரஸ்யத்துடன் இழுத்துச் செல்ல வேண்டும்.
ஆனால் “ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம் விசாரணைத் திகிலைக் கதைக்குள் வைத்திருந்தாலும், ஆரம்ப நிகழ்வுகளில் குற்றவாளி யார் என்பது முன்னரே காட்டப்படுவதால், பார்வையாளர்களின் ஈர்ப்பு சற்று பாதிக்கப்படுகிறது.

இன்றைய சூழலில், ஈழச் சினிமா தயாரிப்பில் இந்தியத் தமிழ்சினிமாவின் தாக்கமின்றி தனக்கென ஒரு பாணியை உருவாக்குவது கடினம்.
சமகாலத்தில் “வர்த்தக சினிமா” என்ற பெயரில் பல தமிழ் திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் வினோத் அவற்றைத் தாண்டி “ஆழிக்கிளிஞ்சல்”-ஐ ஒரு ஈழத் தமிழ்சினிமாவாக வடிவமைத்துள்ளார்.
அது சாதாரண பார்வையாளரும் ஆர்வத்துடன் பார்கக்கூடிய, நல்ல சினிமா முயற்சியாக இருக்கிறது.

ஈழச் சினிமாவின் வளர்ச்சியை உணர வேண்டுமானால், அதை பார்வையிடும் அனுபவம் மூலமே புரிந்துகொள்ள முடியும்.
“ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம், குற்றவிசாரணைத் திகில் வகையில் கதையை முன்னேற்றும் ஒரு முயற்சி , ஈழத் தமிழ்சினிமாவின் தனித்துவமான கலை முயற்சியாகவும் பார்க்கக்கூடியது.
வாழ்த்துகள் படக்குழுவுக்கு 👏🏿👏🏿
09-11-2025
ப.பார்தீ

]]>
https://www.mukadu.com/2025/11/07/26479/ Fri, 07 Nov 2025 14:18:13 +0000 https://www.mukadu.com/?p=26479 ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் பொதுக்கூட்டம்
கலைப்பணியின் புதிய திசைகள்..

Screenshot

ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் பொதுக்கூட்டம்
கலைப்பணியின் புதிய திசைகள்

பிரான்சில் வாழும் ஈழத் தமிழர் கலைஞர்களுக்குள் திரைமொழி பற்றிய உரையாடல் எப்போதுமே பரந்த அர்த்தம் பெற்றது. அந்தப் பரந்த உரையாடலின் தொடர்ச்சியாக, பிரான்ஸ் ஈழத் தமிழர் திரைபட சங்கம் தனது பொதுக்கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2025 மாலை 5:00 மணிக்கு 4, Rue de Compiègne, 75010 Paris என்னுமிடத்தில் நடத்தியது.
வழக்கம்போல் 4 மணிக்கு அறிவிக்கப்பட்டாலும் 5:30 மணிக்கே கூட்டம் ஆரம்பமானது.
இந்தக் கூட்டம் வெறும் நிர்வாக நிகழ்வாக மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் சமூகத்தின் சுயஆளுமையும் கலைச்சிந்தனையும் மீண்டும் மீண்டும் செயல்வடிவத்தினூடான வளர்ச்சியாக வரையறுக்கப்படும் தருணமாகவும் அமைந்தது.

கூட்டத்தை செயற்குழு உறுப்பினர் திரு ரோபர்ட் அவர்கள் அமைதிவணக்கத்துடன் ஆரம்பித்தார். தொடர்ந்து சங்கத் செயலாளர் திரு சோதிலிங்கம் துலபன் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற எட்டு மாத காலத்தில் அமைப்பின் சட்டரீதியான பதிவு உட்பட நிகழ்ந்த அனைத்து செயற்பாடுகளையும் தெளிவுபடவும் விமர்சனமாகவும் கூறினார். இது ஈழச் சினிமா வளர்ச்சியில் பங்கு கொள்ளும் ஒரு அதிகாரமற்ற அமைப்பின் சிறந்த செயற்பாடென்றே கூறவேண்டும். தொடர்ந்து பொருளாளர் திரு ஜனா தனது கணக்கறிக்கையை வாசித்ததோடு, ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தலைவர் எசக்கி முத்து வதனன் தனது உரையை தொடங்கியவுடன், தங்களால் இதைவிட வீரியமாக செயற்பட முடியும் என்றும் அதற்காக செயற்குழு உறுப்பினர்கள் போதாமல் இருப்பதாகவும், அதற்காக புதிய செயற்குழு உறுப்பினர்களை உள்வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த நிர்வாகத் தெரிவின்போது இருந்த உபதலைவர், உபசெயலாளர் விலகியமையால் அவர்களின் இடத்தை நிரப்பும் புதிய அங்கத்தவர்களும் உள்வாங்கப்பட்டார்கள்.

மொத்தத்தில் கூட்டம் ஒரு கலந்துரையாடல் வடிவத்துக்கு மாற்றம் பெற்றது. சங்கத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் அதற்கு எவ்வகையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் ஆழமாக உரையாடினர். கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் திரைமொழியின் சமூகப் பங்கையும், ஈழத் தமிழர் அனுபவம் திரைமூலமாக எவ்வாறு வெளிப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். நிலத்தின்மீதான் அதிகாரமற்ற நாம் எவ்விதமான சமூகப் பொறுப்புடன் இயங்கவேண்டும், வர்த்தக சினிமா என்னும் பெயரில் ஈழச் சினிமாவின் வடிவம் சிதைக்கப்படுவதையும் அவ்வாறான சினிமாவுக்கு “ஈழத் தமிழர் திரைபட சங்கத்தின் ஆதரவு ஒருபோதும் இருக்காது” என்றும் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. படமாக்குவது வெறும் கதைகளாக அல்லாமல், ஈழத் தமிழர் மக்களின் வாழ்வாகவும், போராட்ட வலி சுமந்த நினைவுகளின் அரசியலாகவும் இருக்கவேண்டும் என்று கூறியதுடன், பிரான்சின் கலைவளத்தில் தமிழர் படைப்புகள் இடம் பெறுவதற்கான தளங்கள் குறித்தும் தொடர்ந்து செயற்படுவதன் மூலம் மூத்த கலைஞர்கள் இளைய தலைமுறைகளை எப்படி சங்கத்தில் உள்வாங்கி, அவர்களின் படைப்பாளிமையை உயர்த்துவது, தரமான படைப்புகளை எப்படி கண்டடைவது என்பது பற்றியும் பேசப்பட்டது.

பின்னர், உறுப்பினர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். வெளிநாட்டில் கலைஞர்களுக்கான பொருளாதார சவால்கள், தொழில்நுட்ப ஆதரவு குறைபாடுகள், மற்றும் தமிழ் திரைமொழிக்கு சர்வதேச அளவில் அடையாளம் உருவாக்க வேண்டிய அவசியம் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.

இலாபநோக்கற்ற அமைப்போ இலாபநோக்கமான அமைப்போ நீதித்திட்டம் அவசியம். சந்தா கட்டணத்தைத் தாண்டி, சங்கம் வரவிருக்கும் ஆண்டிற்கான நிதித் திட்டங்களை எந்தவகையிலும் முன்வைக்கவில்லை. சினிமா பயிற்சி, பட்டறை, சினிமாவை திரைக்கு கொண்டு வருவது போன்ற சில செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும், தொடர்ச்சியான எதிர்கால இலக்கு சார்ந்த செயற்திட்டங்கள் முன்வைக்கப்படாமை சங்கத்தின் எதிர்கால நகர்வை பாதிக்கவே செய்யும்.

கூட்டத்தின் முடிவில், கலைஞர்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மையத்திலிருந்தது — “திரை என்பது அரசியலின் நீட்சி; நமது கதை பேசப்படாதவர்களின் குரலாக அழிந்து விடக்கூடாது.”

ஈழத் தமிழர் திரைபட சங்கம், ஈழத் தமிழர்கள் தங்களின் சினிமா முயற்சிகளை தனித்தன்மையோடு, ஆனால் அடிப்படையாக சமூக நினைவுகளோடு இணைத்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது ஒரு சாதாரண சங்கத்தின் நிகழ்வு அல்ல; இது, புலம்பெயர்ந்த நாடுகளில் புலத்தில் உருவாகும் தமிழர் கலைமொழியின் புதுப்பிறப்புக்கான சாட்சியம்.

06-11-2025
ப. பார்தீ

]]>
பிரான்சில் நடைபெற்ற சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2025 https://www.mukadu.com/2025/10/12/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ Sun, 12 Oct 2025 15:10:42 +0000 https://www.mukadu.com/?p=26473

]]>
நூல் அறிமுகம் – துறுவேறும் கைவிலங்கு: சிறை அனுபவத்தின் அரசியல் சாட்சியம். https://www.mukadu.com/2025/10/02/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81/ Thu, 02 Oct 2025 19:18:29 +0000 https://www.mukadu.com/?p=26470

நூல் அறிமுகம் – துறுவேறும் கைவிலங்கு: சிறை அனுபவத்தின் அரசியல் சாட்சியம்

நிகழ்விடம்: 57, Boulevard de Belleville, பாரிஸ் 17-ம் பிராந்தியம்
தேதி: 28 செப்டம்பர் 2025
ஆரம்பம்: பொதுச்சுடர் ஏற்றி அமைதி வணக்கத்துடன், மாலை 16:30

“விடுதலைப் பெருவிருட்சம் வளர்ந்திட, விடுதலை நீர்வளர்ப்போம்” என்ற தொனியில் நிகழ்த்தப்பட்ட அரங்க ஆற்றுகை, பங்கேற்றவர்களை உள்ளார்ந்த ஒன்றுபாட்டுடன் அரங்குக்குள் இழுத்துச் சென்றது.

நிகழ்வின் தலைமை ஏ.கே. ராஜன் வகித்திருந்தார். தமிழ் மொழிப்பரப்பில் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து காணப்படும் அவரின் உரைபாணி இங்கு மீண்டும் பிரதிபலித்தது. ஆனால் அதே பாணி மீண்டும் மீண்டும் நிகழ்வதால், அது இளைய தலைமுறையின் பங்களிப்பைத் தடுக்கின்ற இடையூறாகவே தோன்றியது.

நிகழ்ச்சி வரவேற்புரை, ஆசியுரை, தலைமையுரை, வாழ்த்துரை, கருத்துரைகள், நூலறிமுகம், நூலாய்வு, படைப்பாளியின் பதிலுரை, விடுதலை நீர்சேகரித்தல், நன்றியுரை, நிறைவு என்ற ஒழுங்கமைப்பில் நடைப்பெற்றது. எனினும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது:
“துறுவேறிய நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்”.

ஒரு நூல் அறிமுகம் என்பது அந்த நூலைச் சுற்றிய அரசியல், இலக்கிய, சமூக பரிமாணங்களை ஆராய்ந்து, அதன் பயன்பாட்டை விவாதிக்கின்ற இடமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு நிகழ்ந்தது, நூலைக் குறித்த செறிவான சிந்தனையை விட, எழுத்தாளரின் தனிப்பட்ட பாசம் மற்றும் புகழ்ச்சி அதிகமாக இடம்பிடித்தது.

சிறை வாழ்க்கையின் அனுபவங்கள்.
இலங்கைச் சூழலில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட தனிமை, ஒடுக்குமுறை, மன அழுத்தம், எதிர்பார்ப்பற்ற வாழ்வு போன்றவற்றை எழுத்தாளர் தனது அனுபவத்தோடு இணைத்து வெளிப்படுத்துகிறார். இத்தலைப்பு இலக்கிய ஆவணமாக மட்டுமின்றி, அரசியல் சாட்சியமாகவும் அமைகிறது.

எனினும், நிகழ்வில் பேசிய சிலர் நூலின் இத்தன்மையை விரிவுபடுத்தாமல், “நூலாசிரியரின் தனிப்பட்ட துயரம்” என்ற கோட்டில் மட்டுமே தங்கினர். இதனால், நூலின் அரசியல் வலிமையும், அதன் சமூக அவசியமும் பின்தள்ளப்பட்டன.

எழுத்தாளர் சுட்டிக்காட்டும் ஒரு முக்கியமான உண்மை:
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தமிழ் அரசியல் கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் அலட்சியம். இது வெட்ககேடான ஒன்று.

மேலும், எழுத்தாளரின் மகள் பகிர்ந்த அனுபவங்கள் அப்பா சிறையில் கழித்த நாட்களில் குடும்பத்தின் துன்பங்கள். தமிழ்தேசிய அரசியலின் பணப்பரிமாற்ற முடக்குவாதம் மீது எழுப்பிய கேள்விகள் இவை அனைத்தும் அரங்கில் அமர்ந்திருந்தவர்களை நேரடியாகத் தாக்கின. உண்மையில், அங்கு வந்தவர்களில் சுமார் 70% பேர் குற்றவுணர்வால் சுருங்கியிருந்தனர் என்பதே நிகழ்வின் சொல்லப்படாத உண்மை.

எழுத்தாளரின் நீண்ட உரை அரசியல் கைதிகளின் விடுதலையை மையமாகக் கொண்டிருந்தது. இது முக்கியமான உரை. ஆனால் ஒரு நூல் அறிமுக அரங்கு என்பதால், அது சுருக்கமாக அமைந்து, கலந்துரையாடலுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்தால் பல்வேறு பார்வைகள் வெளிப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால், நிகழ்வு இன்னும் செறிவான அரசியல்-இலக்கிய விவாதத்திற்கு வழிவகுத்திருக்கும்.

இளைய தலைமுறை குரல்களின் பற்றாக்குறை

பிரியா மைந்தன் போன்றோர் பிரஞ்சு மொழியில் சுருக்கமான அறிமுகங்களைச் செய்திருந்தாலும், மொத்தத்தில் இந்த நிகழ்வு முன்னோடி தலைமுறையின் இலக்கியக் கூட்டமாகவே அமைந்தது.
இளைய தலைமுறையின் சிந்தனைகள் கேட்காதது, அரங்கத்தின் மிகப்பெரிய குறையாகவே நினைக்கப்பட்டது.

துறுவேறும் கைவிலங்கு – சிறை அனுபவங்களின் தனிப்பட்ட சாட்சியம் மட்டுமல்ல. அது தமிழ் அரசியல் கைதிகள் மீதான சமூக அலட்சியத்தையும், விடுதலை அரசியலின் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் ஆவணம்.

ஆனால், அதன் அறிமுக நிகழ்வு அந்தச் செறிவை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது.
இது ஒரு எச்சரிக்கை:
ஒரு நூல் அறிமுகம் வெறும் புகழ் பரிமாற்ற மேடை அல்ல, அது கருத்து மோதல்களின், அரசியல் நெருக்கடிகளின், இலக்கிய விவாதங்களின் அரங்கு ஆக வேண்டும்.

நூலை முழுமையாக வாசித்த பிறகே அதன் ஆழ்ந்த உள்ளடக்கத்தைப் பற்றி பேச இயலும். ஆனால் அறிமுக நிகழ்வு நமக்குக் காட்டியது தமிழர் அரசியல்-இலக்கிய அரங்குகளுக்கு இன்னும் சுயபரிசோதனை தேவைப்படுகின்றன.

01-10-2025
ப.பார்தீ

]]>
சம்பவத்திலிருந்து சினிமாவிற்கு சினிமா என்பது வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதல்ல. https://www.mukadu.com/2025/09/23/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae/ Tue, 23 Sep 2025 15:31:30 +0000 https://www.mukadu.com/?p=26462

Screenshot

சம்பவத்திலிருந்து சினிமாவிற்கு சினிமா என்பது வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதல்ல. நடந்ததை அப்படியே திரையில் காட்டினால் அது செய்தித் தொகுப்போ அல்லது ஆவணப்படமோ ஆகிவிடும். ஆனால் ஒரு சம்பவத்தை கலை வடிவில் உயிர்ப்பிக்கும்போது, அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உள்மனப்பயணம் ஆகியவை வெளிப்பட வேண்டும். அப்போதுதான் கதை பார்வையாளரைத் தொடும். சம்பவம் என்பது விதை; சினிமா அதனை கதைப்போக்கின் மரமாக மலரச் செய்யும் கலை. இந்தக் கோணத்தில் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» திரைப்படம், போர் பிம்பங்களைத் தாண்டி மனித வாழ்வின் சிதைவுகளைச் சித்தரிக்கிறது.

உணர்சிகளுக்கும் கழிவிரக்கங்களுக்குமப்பால் படைபின்மீதான பார்வையென்பது படைப்பாளியை அடுத்த தளத்திற்கு எடுத்துசெல்லவேண்டும்.திரைமொழி யென்பது சொல்லப்படும் கதையுனூடே மக்களை இயக்குவதற்கான கருவியாயும் கட்சியின் குரலாயும் ஒலிக்கவேண்டும்

சம்பவங்களை நேரடியாகச் சினிமா கதையாக்கும்போது உணர்ச்சி சிக்கல் கதைப்பரிமானங்களை கண்டடையும் . நடந்த நிகழ்வு என்பது கதை அல்ல அது வெறும் தகவல் மட்டுமே. சம்பவங்கள் சினிமாவில் உயிர்ப்பதற்கு அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உணர்ச்சி ஓட்டம் தேவை. இல்லையென்றால் அது செய்தித் தொகுப்பைப் போல் பாழடைந்துவிடும்.

வாழ்க்கையில் சம்பவங்கள் நீண்டுகொண்டே போகலாம், சில சமயம் ஆண்டுகளாகவும். ஆனால் சினிமா நேரம் குறுகியது.இரண்டு மணி நேரத்தில் அடங்கவேண்டும். அங்கே எந்த தருணங்களை எடுத்துக்கொள்வது, எதனைத் தள்ளிப் போடுவது என்ற தேர்வில் எழும் குழப்பமே சிக்கலாகும். சம்பவத்தின் பாதிப்புக்கள் ஏராளம் இருக்கும் , ஆனால் சினிமா கதை ,கதையின் மையச் சிந்தனைக்கே சேவை செய்யவேண்டும். அதைச் செய்யாமல் விட்டால் சம்பவங்களின் முன் பின் தெரியதவர்களுக்கு கதை சிதறி விழும் அபாயம் உண்டு.

சம்பவத்தை அப்படியே காட்டினால் அது ஆவணப்படம் போலத் தோன்றும் அதேநேரம் அதிகம் மாற்றினால் உண்மையை அழித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழும். அந்த இடையில் சமநிலை வைத்தல் எளிதல்ல. அதிலும் சம்பவத்தில் உள்ள மனிதர்கள் களத்தில் நிற்பது போதுபோல் அவர்கள் பயணம் செய்ய வேண்டும், அவர்களின் உள்ளங்கண்ணில் ஒரு மாற்றம் நடக்க வேண்டும். இல்லையெனில் பார்வையாளருக்கு கதையின்மேலான தொடர்பு ஏற்படாது.

சம்பவம் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும் காட்சியாக்கும்போது சின்னங்கள், உவமைகள், அடையாளங்கள் இல்லாவிட்டால் அது தட்டையாகி விடும் அதேநேரம் யதார்தத்தை மீறிய காட்சிப்படிபங்களும் கதைப்போக்கை சிதைத்துவிடும். சம்பவம் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொள்வதைதாண்டி, அந்த நிகழ்வு பார்வையாளரை எப்படிச் சிந்திக்க வைக்கிறது என்பதே கதையின் முக்கியமானதாக இயங்கவேண்டும்.

பார்க்கப்போனால் ஒரு கதைக்களுக்கு, சம்பவம் ஒரு விதை மாத்திரம். சினிமா கதைசொல்லல் அதைக் கொண்டு மரமாக மலரச் செய்ய வேண்டும். கதைக்காக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களின் இரத்தத்திலும் காட்சிகளின் கண்களிலும் உயிர்ப்பிக்கும்போது கதை உண்மையானதான சம்பவமாக மாற்றம்பெறுகிறது

தமிழ் மக்கள் நிதியில் ஈழத்தின் உள்ளிருந்து உருவாகியிருக்கும் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» என்னும் திரைப்படம், lift சங்கத்தால் பாரிஸ்நகரின் 23 rue des écoles, 75005 இல் 100 இருக்கைகள் கொண்ட ecoles cinéma club பில் 21-09-2025 14:00 அன்று பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.ஆனாலும் அங்கு பார்வையாளர்களாகவந்த யாவரும் ஈழ சினிமா ஆதரவாளர்களே பொதுமக்களின் பிரசன்னம் இருக்கவில்லை நென்றே கூறவேண்டும்.

வெந்து தணிந்தது காடு போர் என்ற வெளிப்புற உச்சரிப்பை மட்டும் சித்தரிக்காது அதனால் சிதைந்த ஒரு தனிப் பெண்ணின், ஒரு தாயின் குடும்ப வாழ்வை உள்வாங்கிச் சொல்கிறது. இராணுவ சீருடைகள் போர்விமானங்கள் ஆயுதங்கள் இல்லாமல் திரையில் பெரும்பாலும் போரின் பெரும் பிம்பங்கள் – வெடிப்பு, துப்பாக்கி, கொலை – நம்மை ஆக்கிரமிக்கின்றன. இந்தப் படம், அந்தச் சத்தத்தின் உள்ளே புதைந்து போன உயிர்களன் அலறலை, ஒரு குடும்பத்தின் துடிப்பை, ஒரு பெண்ணின் உள் உரையாடலை முன்னிறுத்துகிறது.

மையச் சிந்தனை போர் வென்றதோ தோற்றதோ என்பதல்ல, போரின் நடுவே உயிர் தப்பிக்கப் போராடும் மனிதர்களின் கதை தான் எப்போதும் எரியும் உண்மை. இந்தத் திரைப்படம் அந்த உண்மையை, பாழடைந்த மண்ணின் மணத்தோடு, களைத்த கண்களின் கசப்போடு நமக்குக் காட்டுகிறது.கதை கட்டமைப்பு மெதுவாகத் தொடங்கி, மெல்ல உச்சரிக்கும். ஆரம்பத்தில் அமைதி, பின்னர் அச்சம், இறுதியில் தவிர்க்க முடியாத அழிவு. எளிய புனைவின் வழியாகவே பெரிய வரலாற்றின் நிழல் நுழைகிறது. போர்நிகழும் நிலங்களில் மனித உணர்வுகளின் மாற்றம். ஒரு தனிப் பெண்ணின் தினசரி அனுபவங்கள், அவளது முடிவுகள், செய்யும் தவறுகள் – இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தே போர்நிலத்தில் தனி மனிதனை ககுடும்பத்தை எவ்வாறு பிளந்துவிடுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

கதாபாத்திரம் மிகக் குறைவுதான், ஒரு கூட்டுக்குடும்பமாக இயங்கி பிரிவதால் அவை உயிரோடு இருக்கின்றன. அந்த தாயின் உள்ளார்ந்த நடுக்கமே படத்தின் முதுகெலும்பு. அவளைச் சூழ்ந்து நிற்கும் சின்ன சின்ன மனிதர்கள் ,அக்கம் பக்கத்தினர், போராளிகள், பேரப்பள்ளைகள் ,எல்லோரும் அவளது மனசாட்சியின் பிரதிபலிப்பாக மாறுகின்றனர்.

காட்சியமைப்புகள் கண்ணைத் திகைக்க வைக்கவில்லை; மாறாக, ஒளி, புகை, காலியாகிய வீடு, சிதைந்த சுவர், போன்ற சிறு பிம்பங்கள் தான் அதிகம் பேசுகின்றன. அது தான் படத்தின் வலிமை. பெரிய காட்சிகள் இல்லாமல் கூட, ஒவ்வொரு காட்சிகளும் பார்வையாளரின் உள்ளத்தில் கனத்த சுமையை வைக்கிறது.

எதுவும் பேசாமல், எதுவும் தீர்க்காமல்,மனதில் எரியும் குரல் போல முடிகிறது. அந்த முடிவு சற்றே திடீரென தோன்றினாலும், அதுவே உண்மை: போர் எப்போதும் காலம் காலமாக நிகழ்வது முழுமையாக முடிவதில்லை; அது மனிதரின் உள்ளே காயமாகத் தங்குகிறது.

இந்தத் திரைப்படம் சினிமாவாக மட்டும் அல்ல, ஒரு சாட்சியமாகவும் நிற்கிறது. போரின் எரிபொருள் கருகிய பின், மீதம் தங்கும் சாம்பலின் மணம் எப்படி வாழ்வைச் சூழ்கிறது என்பதை இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. அது வரலாற்றைச் சொல்வதில்லை; அது வாழ்ந்தவரின் துடிப்பை, துயரத்தை, தோல்வியை, அதேசமயம் சிறு நம்பிக்கையின் நரம்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்தத் திரைப்படம் எரிந்த மண்ணின் உணர்வை உண்மையோடு தந்தாலும், சில இடங்களில் அது நம்மை முழுமையாக கவரவில்லை.

படம் போரின் நடுவில் வாழும் மனிதர்களின் தனிப்பட்ட வேதனையைச் சித்தரிக்கிறது. ஆனால் அந்தப் பின்னணியில் நடந்த அரசியல் சிக்கல்கள், போரின் பல்வேறு பரிமாணங்கள் எளிதாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. இதனால் வரலாற்று நினைவின் ஆழம் சற்றே குறைந்து விடுகிறது.

சில இடங்களில் படத்தின் ஓட்டம் மெல்லத் தள்ளாடுகிறது. கதாபாத்திரத்தின் உள் மனநிலையை வெளிப்படுத்துவதற்காகக் காட்சிகள் நீளமாக்கப்பட்டாலும், அது சிலது பார்வையாளர்களுக்கு ஒருவித சோர்வை உண்டாக்கியது.

மையக் கதாநாயகி மட்டும் உயிர்ப்போடு இருப்பது நன்றே, அவளை இன்னும் உரமேற்றியிருக்கவேண்டும் ஆனால் அவளைச் சூழ்ந்த மற்ற பாத்திரங்கள் சற்று மேல் தோற்றமளிக்கின்றன. அவற்றின் பின்னணி, ஆழம், எதிர்மறைச் சிக்கல்கள் குறைவதால் கதை ஒருதிசைப்பட்டதாகி விடுகிறது.

சில இடங்களில் படம் நமக்கு துயரத்தை திணிக்கிறது போலத் தோன்றுகிறது. இயல்பான வெளிப்பாட்டை விட, “பாருங்கள், இது துயரம்” என்று வலுக்கட்டாயமாகச் சொல்லும் தருணங்கள் இருக்கின்றன.

படம் நமக்கு கேள்விகளை விட்டுச் செல்கிறது – அது பலமாய் இருக்கலாம். ஆனால் ஒருவித சீரான கருத்து அல்லது தெளிவான நிலைப்பாடு இல்லாமை, கதை தெரியாதவர்களுக்கு “இதன் சொல்லாடல் எங்கே நிற்கிறது?” என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

படம் கலை வடிவில் சாட்சியமாக நிற்கிறது. அது போரின் குரலை அல்ல, போரால் சிதைந்த ஒரு தாயின் உள்ளக்குரலை முன்வைக்கிறது. இதனால் பார்வையாளருக்கு போரின் நெருக்கடியை வாழ்ந்தபடியே உணரச் செய்கிறது. இருந்தாலும் அரசியல் பரிமாணங்கள் புறக்கணிக்கப்பட்டதால் வரலாற்றின் ஆழம் குறைகிறது; பக்கக் கதாபாத்திரங்களின் ஆழமின்மை கதையை ஒருதிசைப்பட்டதாக ஆக்குகிறது. இப்படியான குறைபாடுகள் இருந்தாலும், படம் எரிந்த மண்ணின் மணத்தை, உயிர் தப்பிக்க போராடும் மனிதரின் துடிப்பை நம்முள் பதிக்கிறது. சினிமா வரலாற்றைச் சொல்லும் பொழுது, அது வெறும் நினைவாக மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டும் குரலாக இருக்க வேண்டும் என்பதை இத்திரைப்படம் நமக்கு நினைவூட்டுகிது
23-09-2025
ப.பார்தீ

]]>
2009.மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் ஆயுதப்போராட்டம் தோற்றது ப.பார்தீ https://www.mukadu.com/2025/08/10/2009-%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Sun, 10 Aug 2025 08:28:10 +0000 https://www.mukadu.com/?p=26452 2009.மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் ஆயுதப்போராட்டம் தோற்றது
ப.பார்தீ

மனிதன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் நிற்கும் தருணங்களில், அவன் உண்மையில் தன் அகங்காரத்தையும், தன் சுயபடிமையையும் காக்கப் போராடுகிறான். “நான் தவறுகளைச் செய்ய மாட்டேன்” என்ற நம்பிக்கை, தோல்வி வந்தவுடன் அசைந்து விடும். அதை ஏற்றுக்கொண்டால், பிறர் கண்களில் தன் மதிப்பு குறையும் என்ற சமூக அச்சம், உள்ளுக்குள் ஒருவகைச் சுமையாகி நிற்கிறது. பலருக்கு, தோல்வி என்பது வெட்கம்; அது அவர்களுடைய வாழ்க்கை கட்டுப்பாடு தளர்ந்துவிட்டதற்கான அடையாளம் போலத் தோன்றும்.

ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்வதில் ஒரு விசித்திரமான விடுதலை உண்டு. ஒருவன் அதை ஏற்றுக்கொண்டவுடன், “எங்கே தவறினேன்?” என்று தன்னை நேராகக் கேட்கும் தைரியம் வருகிறது. அந்த நேர்மையான பார்வை தான் கற்றலுக்கான கதவைத் திறக்கும். மனஅழுத்தம் குறையும். சுமை இறங்கும். உறவுகளில் நம்பிக்கை வளரும். புதிய வழிகளை முயல்வதற்கான தைரியம் உருவாகும்.

இப்படி பார்த்தால், தோல்வி என்பது உண்மையில் இருக்கிறதா? அல்லது நம்முடைய மனம் வைத்த பெயரா? திட்டமிட்ட இலக்கு நிறைவேறாதபோது அதை “தோல்வி” என்று சொல்வோம். ஆனால் அதே சம்பவத்தை, “நான் கற்றுக் கொண்டேன்” என்ற பார்வையில் பார்த்தால், அது தோல்வி இல்லை — அது அடுத்த படிக்கல்லே. வெற்றி–தோல்வி என்ற அளவுகோல், மனிதன் தன் எதிர்பார்ப்புகளால் கட்டிய கோடு தான். வாழ்க்கையை ஒரு தொடரும் பயணமாகக் கண்டால், தோல்வி என்ற ஒன்று வெறும் இடைநிலை அனுபவம் மட்டுமே.

மனித வாழ்வில், மன ஆற்றுப்படுத்தலில், தோல்வியை ஒத்துக்கொள்ளுதல் மனித சமூகத்தையே மேம்படுத்தியுள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் எல்லா வளங்களும், பல தோல்விகளின் அடுக்குகளால் கட்டி வளர்க்கப்பட்டவை. எந்த அறிவியல் கண்டுபிடிப்பும், எந்த அரசியல் வெற்றியும், எந்த கலைச் சிகரமும், தோல்வியை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு வந்த தைரியத்தின் பிறப்பினை.

ஆனால் ஈழத்தமிழ் சமூகமோ, ஆயுதப்போராட்டத்தின் தோல்வியை இன்றுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம், தோல்வி பற்றிய நம் மனக் கோலங்கள் இன்னும் கனவின் நிறத்தில்தான் இருக்கின்றன. இது வெறும் அரசியல் வரலாறு அல்ல — இது அடையாளம், தியாகம், மன உளவியல், சமூக நினைவகம், மதநம்பிக்கை ஆகியவற்றின் சிக்கலான கலவையாகும்.

ஆயிரக்கணக்கான உயிர்கள், பல தலைமுறைகளின் இளமை, ஒரு சமூகத்தின் கனவுகள் — இவை அனைத்தும் ஆயுதப்போராட்டத்தில் முதலீடு செய்யப்பட்டன. அதை “தோல்வி” என்று சொல்லிவிடுவது, அந்தத் தியாகங்களை வீணாக்கிவிடுமோ என்ற பயம் ஆழமாக பதிந்துள்ளது. பலருக்கு, அதை ஒப்புக்கொள்வது, “நாம் போராடவே கூடாது” என்று மறைமுகமாகச் சொல்வது போலாகி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனாலும் நாம் அந்த இடத்தில் தோல்வியுற்றோமே — இதுவே உண்மை.

2009 மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை நினைவுகள் இன்னும் புண்களாகவே உள்ளன. அவற்றை எதிர்கொள்வது, தனிப்பட்ட மற்றும் சமூகத் துக்கத்தை நேராகத் தொடுவதற்குச் சமம். அதனால், “நாம் தோற்றோம்” என்ற வார்த்தையைச் சொல்லாமல், இன்னும் ஒரு “தற்காலிக இடைநிறுத்தம்” என்ற உணர்வில் வாழ்கிறோம். இது ஒரு கானால் நீர்கதவாய் — எந்தப் பொருள்முதல்வாதக் கருத்துகளும் இங்கு இயங்கப் போவதில்லை.

தமிழ் அரசியல் பேச்சு இன்னும் ஆயுதப்போராட்டத்தின் வீரச் சின்னங்களையும், ‘வெற்றி கதை’ நிழல்களையும் தாங்கி நிற்கிறது. தோல்வியை ஏற்றுக்கொள்வது, அந்த அரசியல் அடித்தளத்தையே குலைக்கும் அபாயத்தில் தள்ளும் என்ற பயுணர்வு, கடவுள் நம்பிக்கையைப் போலவே காலத்திற்கும் பொய்யாய் மேடைகளில் நடனமாடுகிறது.

பல ஈழத்தமிழர்களுக்கு, ஆயுதப்போராட்டம் வெறும் போர் அல்ல — அது அடையாளத்தின், உரிமை உணர்வின், சமூகப் பெருமையின் ஒரு அங்கம். அதை “தோல்வி” என்று வரையறுப்பது, தங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியை மறுப்பது போல உணர்கிறார்கள். ஆனால் அதையே வைத்து பிழைப்பு நடத்துவோர் வாழ்வோ சொழிந்தோங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலர், “இது முடிவல்ல; இது ஒரு கட்டம் மட்டுமே” என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை, தோல்வியைச் சுமையாகப் பாராமல், ‘மறுபிறப்பு’ கதையாக வைத்திருக்கிறது.

ஆனால் கேள்வி மீதம் நிற்கிறது: இவை பகுத்தறிவுள்ள ஒரு சமூகத்தின் செயலகமாக அமையுமா? இதுவா போராளிகளின், மாவீரர்களின் உண்மையான வீச்சு? தியாகத்தை நினைவு கூர்வது ஒருபக்கம், அதே தியாகத்தின் அரசியல் பயணத்தை விமர்சனமாகச் சோதிப்பது மறுபக்கம். இந்த இரண்டையும் செய்யாத சமூகமே, தன் வரலாற்றை உண்மையாக எழுத முடியாது.

தோல்வியை ஏற்றுக்கொள்வது, அந்த தோல்வியில் இருந்து விடுபடுவதற்கான முதல் படி. மறுப்பின் சுவருக்குள் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்றால், எதிர்காலப் பாதை ஒருபோதும் திறக்காது. உண்மையைச் சொல்வது துரோகம் அல்ல; உண்மையை மறைப்பதே துரோகம்.

ஈழத்தமிழ் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, இந்த வரலாற்றை நேராகக் காணும் தைரியத்தில்தான் இருக்கும். ஆயுதப்போராட்டம் தோற்றது என்பதைக் கூறி, அதன் காரணங்களைப் பகுப்பாய்வு செய்து, புதிய அரசியல் பாதையை உருவாக்கும் துணிவே — உண்மையான மரியாதையை அந்தத் போராளிகளுக்கு கொடுக்கும் செயல்.

]]>
“பாட்டிய பாணியில் பிறந்த தலைவர்: வாசுகனின் நினைவியல் கலைநடைமொழி” ப.பார்தீ https://www.mukadu.com/2025/07/18/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ Fri, 18 Jul 2025 16:45:04 +0000 https://www.mukadu.com/?p=26448 “பாட்டிய பாணியில் பிறந்த தலைவர்: வாசுகனின் நினைவியல் கலைநடைமொழி”
ப.பார்தீ
12-07-2025

முள்ளிவாய்களால் கஞ்சிக்காய் நின்றோரின் நினைவுணர்வை கலையாக்கி கஞ்சிப்பாடல் வந்ததுபோல் கலையின் மறுவடிவில் காட்சியாக்கி உயிர்பேற்றி மே 18 காலப்பகுதியில் ஓவியர் வாசுகனின் தலைவர் என்ற கலைப்படைப்பை “எஸ்பாஸ் சைன் பியேர்” Espace Saint Pierre பாரிஸை அண்மித்த சென்லிஸ் SENLIS நகரத்தில் பார்கமுடிந்தது. எஸ்பாஸ் சைன் பியேர் எனும் கலைக்கூடம் மனித நாகரீக வளர்ச்சியில் பாச்சலின் இன்னுமொரு வடிவமாய் கைவிடப்பட்ட பிரமாண்டமான ஒரு தேவாலயம் என்பது சிறப்பு. சென்ற வருடம் இதே கூடத்தில் வாசுகனின் “இறுதி போசனம்” என்ற தலைப்பிலான நிகழ்த்து கலையையும் கண்டுகளித்தேன். அதே காலப்பகுதியில் மீனவன் (Pêcheur) எனும் தலைப்பிலான ஓவியங்களும் காண்பிக்கப்பட்டன. அவரின் படைபின் உள்ளுணர்வை, நுட்பத்தை விளங்கிகொள்வதற்கு முன் படைப்பின் உருவாக்க உத்தி மற்றும் பயன்படுத்தபட்ட மூலங்களை நாம் கண்டறியவேண்டும்.

“பாட்டிய பாணியில்” மண்சார்ந்த வரங்களை பிரதானமாக கொள்வதே அவரது அடையாளம். தெற்காசிய, சைப்ரஸை அண்டிய மத்தியத்தரை தேசத்து தொல்லியல், ஜப்பானை மையமாக கொண்டு கிழக்காசியா, குவாடலூப் , மாடினிக்கை அண்டிய கரேபிய தேசங்களின் மத்திய காலத்திற்கு முற்பட்ட படைப்புகளின் தாக்கம் இவரது படைப்பின் மூலதனம். பராம்பரிய காலத்தின் அல்லது அதற்கு முற்பட்ட மனிதனின் படைப்பின் தேடலும் அதன் கூறுகளையும் இவரது படைப்புகள் நமக்கு சொல்லும் செய்தி – பாட்டிய பாணியில் தோய்கிறது.

“பாட்டிய பாணியின்” தெறிப்பில் “தலைவர்” எனும் படைப்பு பிறந்தது. கடற்கரை மண்சார்ந்த நிறத்தில் களிமண்ணில் உருவான அந்தமுகம். மண்நிறம், கறுப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வர்ணங்களால் உருமறைப்பு (Camaflage) செய்ய முயல்கிறது. சீருடை உருமறைப்பு கொரிலா போராட்டத்தின் பிரதான அங்கம். மண்ணாலான அந்த முகத்தின் இரு கன்னங்களிலும் நட்ச்சத்திர மீனின் ஓடுகள் புதைக்கப்படுள்ளது – இறுதியாக கடந்து சென்ற எமது காலத்தை இரண்டாக பிரிக்கும் வகையாக அல்லது இலட்சியத்தின் இலட்ச்சனைகளாக கூட கூறலாம். இவ்வாறாக முகம் முழுவது கடல் எச்சங்கள் பதிக்கப்பட்டிருப்பது நெய்தல் நிலத்தின் வாழ்வின் பிறப்பையும் முடிவையும் பறைசாற்றுகிறாரோ. நெற்றியில் சிவப்பு கோடு பிளவு போன்றும் சிவப்பு கொடி போலவும் – செங்கொடி பறக்கட்டும்.

தலைவரின் முகத்தின் பின்புலம் தாங்கும் புறங்கள் சிதைந்திருக்கும் சாக்குதுணி இயல்பு குலைந்த சமூகப்பிடிப்பின் முகத்தின் கதையை பேசுவதாக வாழ்வை பிரதிபலிப்பதாகவும் பொருளாதாரத்தின் அடையாளமாகவும் பின்னப்படுள்ளது. கீழ்புறம் மயில் இறகும் சில நூல்களும் பிணைந்துள்ளன. மயிலிறகு பெரும்பாலும் அழகு, விலாசம், மற்றும் ஆன்மீக கண் எனப் பொருள் கொள்ளப்பட்டாலும் படைப்பாளி முல்லை நிலத்தின் வாழ்வியலை முன்னிறுத்துவதாக செப்பினார் – முருகனுக்கு இணையானவர் என்று பாடல் வரிகள் நெரிங்கிபோகிறது.

சிக்கிய நூல்களோடு நெய்த இப்படைப்பு வாழ்வின் துணிச்சல், செய்திகள், நிகழ்வுகள், அல்லது அரசியலை ஆழமாக நம்மோடு உரையாடுகிறது. பல சிவப்பு கோடுகள் ஒன்றாக ஓரிடத்தில் குவிவது – பல நாடுகள் ஒன்றிணைந்து முடக்கிய செய்தி.

பாட்டிய பாணியில் அனா இப்படைப்பு ஒரு கலப்பு நவீன படைப்பு (mixed media work). குறியீட்டு உருவக கலை இயற்கை பொருட்கள் சமூகபௌதிக கருத்தியலால் தூண்டப்பட்ட ஒரு மாமனிதனின்கதையை காவிவந்த முகமூடிப் பாணிகலை உணர்வு பெருக்கேறி உயிர்த்திருந்தது

]]>
“நம் திருமணக் கொண்டாட்டங்களில் நம்மையா பார்க்கிறோம்?” ப. பார்தீ https://www.mukadu.com/2025/07/12/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99/ Sat, 12 Jul 2025 17:47:22 +0000 https://www.mukadu.com/?p=26442 “நம் திருமணக் கொண்டாட்டங்களில் நம்மையா பார்க்கிறோம்?”
ப. பார்தீ
11-07-2025

தமிழும் தமிழ்சார்ந்த ஆர்வமுடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர் புகைப்படக் கலைஞர். அவர் ஒருநாள் எனக்கு ஒரு அழைப்பை எடுத்திருந்தார். தமிழ் வீடொன்றில் “மெஹந்தி” நிகழ்வை படம் எடுக்கப் போவதாக கூறினார்.
நான் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன்:
இது தமிழர் கலாசாரமா? பண்பாடா?
அவர்: இவை இரண்டுமே இல்லை, இது வடஇந்திய பண்பாட்டு செருகல். ஆனால் இப்போது குறிப்பாக ஈழத் தமிழர்கள்மத்தியில் பரவலாக பரவி வருகின்றது.
அப்போது நான் அவரிடம் கேட்கிறேன்:
நீங்கள் ஒரு தமிழராக இதைக் காட்சிப்படுத்தச் சொல்வது அறமில்லைதானே?
என்று.அவர் இதைத் தன் தொழிலாகவும், “நான் போகவில்லை என்றால் இன்னொருவர் போய்விடுவார்” என்று தனது நிலைப்பாட்டை எனக்கு தெளிவுபடக் கூறினார்.

ஆனால் என் மனமோ,
வடஹிந்திய பண்பாட்டு செருகல்கள் தமிழர்கள்மீது — அதுவும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்மீது — ஹிந்துத்துவ மதவாத அடிப்படையில் ஒரு மெல்லிய பண்பாட்டு அழிப்பைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதைத்தான் உணர்ந்தது.இது தொடர்பாகத் தேடினால், பணம், புகழ், வர்த்தக அடிப்படையில் தமிழர் பண்பாடு சார்ந்த புரிதலில்லாத பண்பாட்டு மலகீனப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே நாமிருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.இவை பற்றி தனிமனித விருப்ப/வெறுப்புபற்றோ அல்ல; பண்பாட்டு மீட்சிக்காக உழைக்கவேண்டிய ஒரு மக்கள்கூட்டமாகவே இருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.நாமா இந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தை செய்தோம் என்பதுதான் ஆச்சரியமும்கூட – அதுவும் தமிழ்தேசியம் என்ற ஒருமைப்பாட்டு சொற்பத்தையைப் பாவித்து, தமிழும் தமிழ்பண்பாடுகளும் புரிந்து கொள்ளாத வாழ்க்கை நிலை…

திருமண மரபு என்பது ஒவ்வொரு இனக்குழுமமும் காலவோட்டத்தில் சிறு மாற்றங்களைச் செய்தாலும், தமது பாரம்பரியத்தை தொடர்ச்சியாகவே பின்பற்றிவருகின்றது. அதற்கு தமிழர் நாமும் விதிவிலக்கல்ல.தமிழர் திருமணப் பண்பாடுகள் பூர்வீகத்தில் மதஅடிப்படைவாத சடங்குகளைப் பின்பற்றாது, மனுட அறக்கோட்பாட்டில் நிகழ்ந்த ஒன்று. ஆனால் இன்று அவை மருவமருவி பலதரப்பட்ட சடங்குகளால் கட்டமைக்கப்பட்டுவிட்டது.ஆனாலும் தமிழ் திருமணக் கொண்டாட்டங்கள் எங்கள் இசை, உணவு, குடும்ப ஒற்றுமை மற்றும் பண்பாட்டு அடையாளங்களால் நிரம்பியுள்ளது. அது எங்கள் பெருமையும் அடையாளமும்கூட.

ஆனால் சமீப காலங்களில், வடஹி்ந்திய கலாச்சாரங்களில் இருந்து வந்த “மெஹந்தி விழா” தமிழர் திருமணங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகவே கையாளப்படத் தொடங்கியுள்ளது.
இது தமிழர் பண்பாட்டில் அக்கறையுள்ள ஒவ்வொரு மனங்களிலும் கேள்வியை எழுப்பி வருகிறது என்று ஏற்படுத்துகிறது:
இது ஒரு கலாசார உள்வாங்கலா? அல்லது தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மறுகவைக்கும் ஒத்திசைவை கொண்ட கலாசார அழிப்பா?

“மெஹந்தி” என்பது முதன்மையாக வடஇந்தியா, பாகிஸ்தான், மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் கலாசாரங்களில் தோன்றியதொரு விழா நிகழ்வாகும். இதில் மருதாணி இலைகள் அரைத்துத் தோலில் கலைவடிவங்களாக வடிவமைக்கப்படுகிறது.இது பெரும்பாலும் திருமணத்திற்கு முன் மணமகளின் நல்வாழ்க்கைக்காக, கணவனின் பெயரை மருதாணியில் ஒளிந்து எழுதும் சடங்காக ஆரம்ப காலங்களில் நிகழ்ந்துள்ளது.
பெண்கள் சந்திக்கும் மகிழ்ச்சி மையமான நிகழ்வாக நடக்கிறது.தமிழ் மரபியலில் அல்லது சங்க இலக்கியங்களில், திருமணச் சூழலில் “மருதாணி விழா” என்ற பெயரில் ஒரு நிகழ்வும் கிடையாது.மருதாணி இலைகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தாலும், மருதாணி இயற்கையாக உடலை குளிர்பதப்படுத்தும் மூலிகை.வியர்வை, தலைவலி, வெப்பம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்துவர்.பெண்கள் அழகுப்பராமரிப்பு ஒன்றாக முக்கியமான கலை நிகழ்வாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டதுதான்.இதை 1980 காலப்பகுதிக்கு பிறகு பிறந்த நாங்களும் கண்ணூடாகப் பார்த்த நடமுறைவிடயுமும் கூட.

1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் என்று உலகம் உள்ளங்கைபோல் சுறுங்குகிறது.
நகரமயமாக்கல்மூலம் திருமண நிகழ்வுகளை ஒட்டி பெரும் இலாபமீட்டக்கூடிய புதிய சந்தை திறக்கின்றது.அது எங்கள் பண்பாடுகளை நவீனமயப்படுத்திப் பரவச்செய்வதைவிடுத்து, புதிய பண்பாட்டு இறக்குமதிகளை செய்கின்றது.
அதனூக்கிகளான தமிழ் சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் “மெஹந்தி விழா” தமிழர்களுக்கும்
“திருமணத்திற்கு கட்டாயமாய் வேண்டிய நிகழ்வாக” காட்டப்பட்டு வருகின்றது.
இதில் முக்கிய பங்களிப்பு:வடஹிந்திய பாலிவுட் கலாசாரம்நகர்ப்புற உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கைமுறைடிக்டொக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் நிகழ்வுப் போட்டி மனநிலைகள்இதனால், தமிழ் பண்பாட்டு புரிதலில்லாத “மெஹந்தி விழா” இன்று மணமகளின் சிறப்புநாள் பரிணமித்து,
புகைப்படக் கலைஞர்கள், நடனம், DJ கலந்த பண்பாட்டை அழித்து நாகரிகக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

“மெஹந்தி விழா” என்பது தமிழர் கலாச்சார மரபில் இல்லாத ஒன்று. ஆனால் இன்று, அது தமிழர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது.அழகு நிகழ்வாக, புதுமை உணர்வாக, மணமகளின் தனிப்பட்ட தருணமாக இருந்தாலும்,
மாற்றத்தை ஒவ்வொன்றாக எதிர்த்தால்தான் மரபைக் காக்கிறோம் என்பதில்லை.
ஆனால் எந்த மாற்றம் என்னை விட்டுப் பிறந்தது? எது என்னுள் இருந்து எழுகிறது? என்பதற்கான உணர்வும் விழிப்பும் இல்லாமல் ஏற்கும் ஒவ்வொரு கடன் கலாசாரம் (borrowed culture),மென்மையான அடையாள இன அழிப்பை ஏற்படுத்தும்.ஒரு இன விடுதலைக்காக போராடும் நாம், எம்மையே அழிக்கலாமா?

மணவிழா என்பது யாரும் பார்ப்பதற்கான நிகழ்வல்ல.வருமான ஏற்றத் தாழ்வுகளை முன்னிறுத்திக் கொண்டாட்டங்களை ஒழுங்குசெய்யும் நிகழ்வுமல்ல.அது ஒவ்வொரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு இனத்தின், ஒரு மொழியின் வாழ்வின் சரம்.அதில் நம்முடைய இசை, நம் உணவு, நம் மண் வாசனை, நம் உறவுத் தோழமை, நம் பண்டைய மரபு ஒவ்வொன்றாகவே ஒளிரவேண்டும்.
மற்றவர்களிடம் பழக நம் வழியை மாற்றத் தேவையில்லை; நம் வழியையே காலத்திற்கேற்ப அழகு செய்யலாம்.
எங்கள் பூர்வீகத்தை சிறப்பாக்கி தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம்.

மெஹந்தி விழா – தமிழர்கள் தங்களை அறியாது தங்கள் கலாச்சாரத்தில் வேறு ஒரு இனத்தின் அடையாளங்களை உட்புகுத்தி,
எமது பண்பாட்டைத் திரிவுபடுத்தும் அந்த நிகழ்வின் உண்மைதன்மையை சிதைக்கும் அறிவுப்போதாமை.அது அழகாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் நுழையும் போது, நம்மை மறந்து அவர்களை ஆடம்பரமாக நகலெடுப்பது போல இருக்கக்கூடாது.

புதிதைக் காண விழித்திருப்பது அழகு —
ஆனால், நம் பழமையை அறியாது மறக்கும் தூக்கத்தில் விழாதிருக்க வேண்டும்.
அதற்கு நாம் யார் என்பதைக் நம்மால் அறிந்திருக்க வேண்டும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

]]>