//anjeng
Gota விலாகினால் அடுத்த நடைமுறை என்ன!*
*பதவிக்காலம் முடிவதற்குள் ஜனாதிபதி பதவி விலகினால், ஜனாதிபதியின் பதவி காலியாகிவிடும்.*

*அத்தகைய நிகழ்வில், அரசியலமைப்பின் 40 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.* *ஜனாதிபதியின் காலியான பதவியை நிரப்ப, ஜனாதிபதி ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.*
*ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தால், ஜனாதிபதி ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட வேண்டும்.*
*அத்தகைய கூட்டத்தில், ஜனாதிபதியின் ராஜினாமா குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் காலியாக உள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டும்.*
*ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜனாதிபதியின் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுவார்.*
*ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.* *ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் (எண். 2 இன் 1981) பாராளுமன்றத்தால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது.*
*ஜனாதிபதியின் அலுவலகம் காலியாகி புதிய ஜனாதிபதி பதவியேற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுகிறார்.*
*இந்த காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயல்பட நியமிக்கப்படுவார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.*
*அதாவது, கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில், புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்யும் வரை ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பார்.*
]]>
சிறிலங்காவில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சிவில் சமூக இயக்கங்களால் நாளை சனிக்கிழமை அரசுக்கு எதிராகப் பெரும் பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக அரசு தலைநகரில் இன்றிரவு ஒன்பது மணி முதல் பொலீஸ் ஊரடங்கை அறிவித்திருக்கிறது.
கொழும்பு வடக்கு (Colombo North,) தெற்கு மற்றும் மத்தி (South, and Central) நீர்கொழும்பு (Negombo,) கல்கிசை(Mount Lavinia,) நுஹெகொட (Nugegoda,) மற்றும் களனி (Keleniya) பிரதேசங்களில் ஊரடங்கு அமுலுக்கு வருவதாக பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதேசமயம் கொழும்பில் தொலைபேசி சேவைகள், சமூக ஊடகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவல்களை நாட்டின் தொலைத் தொடர்புகளை ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு மறுத்துள்ளது.
நாடு மீளமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் பதவியில் நீடிக்கின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவையும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தையும் வெளியேறுமாறு கோரியே நாளைய ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
நாட்டில் சர்வ கட்சி அரசு ஒன்றை நிறுவப் பௌத்த மகாசங்கங்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றன. அதனால் நாளைய ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களது ஒத்துழைப்பும் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சகல பகுதி மக்களையும் தலைநகரில் ஒன்று திரட்டிப் பெரிய அளவிலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்குடன் “முழு நாடும் கொழும்புக்கு” என்ற பெயரிலான சமூக ஊடகப் பிரசாரம் மூலமாக நாளைய ஆர்ப்பாட்டத்துக்கு கடந்த சில நாட்களாக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் நாளை நடக்கவிருக்கின்ற மக்கள் எதிர்ப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் உட்பட வெளிநாட்டு ராஜதந்திரிகள் அரச எதிர்ப்பு நிகழ்வுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அமைதியான வழி முறைகளில் மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளிப்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று அரசைக்கோரும் ஊடகப் பதிவுகளை அவர்கள் வெளியிட்டுவரு கின்றனர். ஜ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரும் இதே போன்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்து வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எரிபொருளுக்காக அடிபடுகின்ற மக்கள் கூட்டத்தினர் பொலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் மோதக் கூடிய நிலைவரங்கள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன. சமூக மட்டங்களில் அமைதியின்மை அதிகரித்து வருவதால் மக்களின் சீற்றம் நாளைய ஆர்ப்பாட்டங்களில் பெரிய அளவில் வெளிக்கிளம்பலாம் என்று அரசு அஞ்சுகிறது. தலைநகரில் பொலீஸாருடன் மேலதிகமாக இராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குமாரதாஸன் பாரீஸ்.

நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு
தேர்தலை அறிவிக்க அதிபர் திட்டம்?
சிறிலங்காவில் அரசுக்கு எதிரான ஆர்ப்
பாட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலை
யில் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்
பட்டிருந்த பொது அவசரகாலச் சட்ட விதி
களை அதிபர் கோட்டாபய ராஜபக்ச திடீ
ரென நீக்கியிருக்கிறார். அதிபரது தனிப்
பட்ட வாசஸ்தலத்தை ஆர்ப்பாட்டக்காரர்
கள் முற்றுகையிட முயன்றதை அடுத்து
கடந்த முதலாம் திகதி நாடெங்கும் அவசர
காலச் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்
துகின்ற அதிவிசேட அரசிதழ் ஒன்றை
கோட்டாபய விடுத்திருந்தார். ஆனால்
இன்னமும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்
கள் தணியாத நிலையில் அவசரகாலச்
சட்ட விதிகளை அவசரப்பட்டு நீக்குகின்ற
அறிவிப்பை இன்றிரவு அதிபர் வெளியிட்
டிருக்கிறார் எனக் கொழும்புச் செய்திகள்
தெரிவிக்கின்றன.
அமைதியான வழிமுறைகளில் மக்கள்
நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்து
வதற்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடு
கள் தங்கள் ஆட்சேபத்தை வெளியிட்டி
ருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டாபயவின் அரசாங்கத்தின் அமைச்
சர்வையில் பிரதமர் தவிர்ந்த அனைவ
ருமே பதவி விலகிவிட்டனர். அமைச்சுப் பொறுப்புகளைப் பங்கிட முன்வருமாறு சகல கட்சிகளுக்கும் அதிபர் விடுத்த வேண்டுகோளைப் பிரதான எதிர்க்கட்சி
கள் நிராகரித்துள்ளன.கோட்டாபய உட்
பட ராஜபக்ச பரம்பரையினர் அனைவ
ருமே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
நாடாளுமன்றம் இன்று கூடிய போது
கோத்தாபயவின் கூட்டணி அரசில் இடம்பெறும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சுமார் 42பேர் தனித்து-சுயாதீனக் குழுக்
களாகப்-பிரிந்ததை அடுத்து ஆளும்தரப்பு பெரும்பான்மையை இழந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச பதவிவிலகி புதிய பிர
தமர் தலைமையில் இடைக்கால அரசு
ஒன்று நிறுவப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அதிபர் கோட்டாபயவைப்
பதவி விலகுமாறு கேட்டு நாடெங்கும்
புதிதாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன
கொழும்பு நாடாளுமன்றத்துக்கு அருகே
ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தின
ரிடையே இராணுவ வீரர்கள் எனச் சந்தே
கிக்கப்படுவோர் மோட்டார் சைக்கிள்களு
டன் நுழைந்து மிரட்டல் விடுத்தனர்
என்று கூறப்படுகிறது. அதன்போது
அங்கு பொலீஸாருக்கும் இராணுவத்தி
னருக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்
பட்டதாகவும் அது தொடர்பாக விசாரிப்
பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்
கொழும்பு செய்தி ஊடகங்கள் தெரிவித்
துள்ளன.
இந்த நிலையில் அவசரகாலச் சட்ட விதி
களை அதிபர் எதற்காக உடனேயே நீக்
கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்
கான வாய்ப்புகளைத்தவிர்த்து நேரடியா
கவே பொதுத் தேர்தலை அறிவிக்கின்ற
நோக்கத்துடனேயே அவசரகாலச் சட்ட
விதிகளை அதிபர் கோட்டாபய நீக்கி
யுள்ளார் என நம்பப்படுகிறது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
]]>மக்கள் ஆர்ப்பாட்டம் அவசர நிலை
அல்ல என்கிறார் ஜேர்மனிய தூதர்
நாடு முழுவதும் ஊரடங்கு விரிவு
சிறிலங்காவில் அவசர காலச் சட்டத்தை
அமுல் செய்த கையோடு நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அரசு
அறிவித்திருக்கிறது. ஆயுதம் தாங்கிய
இராணுவத்தினர் நாடெங்கும் பாதுகாப்
புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு போர்க் காலத்தில் கூட இருந்திராத அளவில் பெரும் பொருளாதார நெருக்க
டியில் சிக்கியிருக்கிறது. வெளிநாட்டு
நாணய வங்குரோத்து நிலையும் பண
வீக்கமும் அத்தியாவசிய உணவு, மருந்து பொருள்களது தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளன. மின் தடையால் நாடு முழுவதும் இருளில் மூழ்கி வருகிறது. நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக வீதிப் போராட்டங்களைத் தொடக்
கியுள்ளனர்.
சிறிலங்காவில் அவசர காலச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து
ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரி
வித்துள்ளது.
அமைதி வழியில் சுதந்திரமாக ஒன்று
கூடுதல் உட்பட கருத்துச் சுதந்திரம்
போன்ற சகல குடிமக்களுக்குமான ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்
குமாறு அது இலங்கை அரச அதிகாரி
களை வலியுறுத்தியுள்ளது.
“இலங்கை மக்களுக்கு இது மிகச் சவா
லான காலம். ஐரோப்பிய ஒன்றிய நாடு
கள் நிலைமையை மிக உன்னிப்பாக
அவதானித்து வருகின்றன” – என்று ஒன்
றியம் விடுத்த செய்திப் பதிவு ஒன்றில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, கொழும்பில் உள்ள ஜேர் மனியத் தூதர் அவசரகாலச் சட்டம் அமு
லுக்கு வந்திருப்பதைக் குறிப்பிட்டு வெளியிட்ட ருவீற்றர் பதிவு ஒன்றில்,
” மக்கள் வீதிகளில் இறங்குவது அவசர
நிலைமை(emergency) அல்ல. அவசர
நிலைப் பிரகடனம் அவர்கள் மேலும்
வீதிக்கு வரவே வழிவகுக்கும்.காரணத்
தையும் விளைவுகளையும் கணக்கில்
எடுங்கள்” – என்று எழுதியிருக்கிறார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர்
ஜூலி ஷூங் (Julie Chung)”இலங்கை மக்கள் அமைதி வழிகளில் எதிர்ப்பை
வெளிப்படுத்தும் உரிமை உடையவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு உடனடி உதவியாக 40 ஆயிரம் மெற்றிக் தொன்
டீசலைக் கடனுக்கு வழங்குவதாகப் புது
டில்லி தெரிவித்துள்ளது. அதேசமயம்
இந்திய வர்த்தகர்களால் வழங்கப்பட்ட
40 ஆயிரம் தொன் அரிசியையும் இந்தி
யா கொழும்புக்கு வழங்குகிறது. இதற்
கிடையில் இலங்கையில் தோன்றியுள்ள
அமைதியின்மையை அடுத்து இந்தியப்
படைகள் அங்கு அனுப்பப்படவுள்ளன
என்று பகிரப்படும் தகவல்களை கொழும்
பில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்
ளது.
(படம் :நன்றி ஏஎப்பி)

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்த படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்..
கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்கின்றார் புலம்பேர் மண்ணில் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிகரம் நீட்டியும் வருகின்றவர்கள் அவர்களில் ஒருவர். கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம் என்பவர். Inforce Group of Companies உருவாக்கி அதன் ஊடாக மாபெரும் வெற்றி பெற்று நிற்கின்றார்.
இன்று தனக்கு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கி தன் வளர்ச்சியில் சாதனை புரிந்து நிற்கும் நம் தமிழர் சந்திரன் ராசலிங்கம் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.
நன்றி பாஸ்கி
]]>
அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை நிறைவிற்காக விசேட நிகழ்வு ஒன்று இவ்வாறு ஏற்பாடு யெ்யப்பட்டிருந்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தனது இறுதித் தேர்தலாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எனக்கு 63 வயதாகின்றது. இன்னும் 5 வருடங்கள் சேவை செய்தாலே போதும். நாம் அனைவரும் ஒய்வு பெற வேண்டிய நேரத்தை அறிந்திருக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
]]>
சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ்
2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், அவர் அப்போது தீவிரவாதியல்ல நல்ல மதவாதி எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெரிவுக்குழு முன்னிலையில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,
கேள்வி:- நீங்கள் இலங்கையர் என நினைக்கிறேன், அவ்வாறு இருக்கையில் “இலங்கையில் நாங்கள் சிறுபான்மை, உலகில் பெரும்பான்மையினர் நாம் தான்’ என நீங்கள் கூறியது சரியா?
பதில்:- இது எனது அரசியல் கருத்து அல்ல, இது ஒரு பள்ளிவாசலில் நான் கூறிய விடயம். எமது மக்கள் அங்கு மிகவும் பயந்த சுபாவத்தில் இருந்தனர்.
அன்றாட வாழ்க்கை அனைத்துமே ஸ்தம்பிக்கப்பட்டு இருந்தன. வழமையாக எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி முகத்திடலில் இடம்பெறும்.
இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சம் அடைய வேண்டாம் என கூறி உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன்.
இதன்போதே நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே அச்சமடைய வேண்டாம் என கூறினேன். எனினும் ஊடகங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டனர்.
கேள்வி :- நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா?
பதில்:- நான் இலங்கையன் என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன். நான் எப்போதும் நாடு என்ற உணர்வுடன் வாழ்கிறேன். பெளத்த நாடு என்ற எண்ணத்தில் நான் பல கருத்துகளை கூறியுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்சமடையக் கூடாது என்றே கூறினேன்.
கேள்வி:- சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா?
பதில் :- ஆம் சந்தித்தேன்
கேள்வி:- எப்போது என்ன நோக்கத்தில் சந்தித்தீர்கள்?
பதில்:- கூறுகிறேன். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு முடிந்தவுடன் அவர் எம் அனைவரையும் சந்தித்து பேச அழைப்பு விடுத்தார்.
அப்போது அவர் நல்ல மதவாதி. குறிப்பாக இளைஞர்கள் அவருடன் இருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் எம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், ஏனைய பலரும் வந்தனர்.
கேள்வி:- அரசியல் வாதிகளை கூப்பிட்டு பேசும் அளவிற்கு யார் இவர்? இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் ஏன் இவருக்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்? அவருக்கு அனைத்து கட்சிகளை சந்திக்க இருந்த நோக்கம் என்ன?
பதில்:- அப்போது அவர் பயங்கரவாதி அல்ல, அவர் சிறந்த மத தலைவராக இருந்தார். அவருக்காக பல இளைஞர்கள் பின்புலத்தில் இருந்தனர். ஆகவே வாக்குகளை பெற்றுக்கொள்ள அவர் தேவைப்பட்டார்.
கேள்வி:-நீங்கள் அவரை பயங்கரவாதி என ஏற்கமாட்டீர்களா?
பதில்:- அவர் பயங்கரவாதி தான் அதனை நான் மறுக்கவில்லை, ஆனால் அந்த காலத்தில் அவர் மத தலைவர். இளைஞர் அனைவரும் அவருடன் இருந்தனர். பல உடன்படிக்கைகள் அவரினால் போடப்பட்டன .
கேள்வி:- என்ன உடன்படிக்கை ?
பதில்:- தேர்தல் கூட்டங்களில் பாடல் ஒலிபரப்ப முடியாது. பெண்கள் கூட்டங்களுக்கு தனியாக வர வேண்டும். வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக நாம் அதனை ஏற்றுக்கொண்டோம்.
கேள்வி:- தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்ள எந்த உடன்படிக்கையையும் செய்வீர்களா?
பதில்:- அவர் அப்போது பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு மத தலைவர். அவர் பயங்கரவாதி என்றால் நாம் ஏன் சந்திக்க போகின்றோம்? அப்படி செய்ய மாட்டோம்.
அது மட்டும் அல்ல அதன் பின்னர் எனக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுத்தார். 2015 காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டேன். அதில் இருந்து எனக்கு எதிராகவே அவர் செயற்பட்டார்.
என்னை அவர் 2000 வாக்குகளால் தோற்கடித்தார். அந்த சந்திப்பின் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை.
ஏனெனில் அவர் எனக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிரசாரம் செய்தார். நான் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் என்னை தேசிய பட்டியலில் இணைக்க வேண்டாம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்.
என்னுடன் சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்பார்கள். அவர்களை இவர்கள் தாக்கினர்.
இது தொடர்பில் வழக்கு தொடுத்துள்ளேன். இதில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது. அப்போதில் இருந்து எனக்கு எதிராக பல எதிர்ப்புகள் வந்தன.
இந்தியாவில் கேலி சித்திரம் ஒன்றை எடுத்து அதில் எனது முகத்தை பொருத்தி முகப்புத்தகதில் விமர்சனம் செய்தனர், அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்கொலை தாரியாவார்.
என்னை மட்டும் அல்ல எனது குடும்பத்தையும் விமர்சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரை தேடுவதாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவரது குழுவை கைதுசெய்ய வேண்டும் என நானும் சூபி குழுவினரும் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் அதன் பின்னர் அவர் இருக்கவில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறினார்கள்.
அதன் பின்னர் அவரை நாம் சந்திக்கவில்லை. எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்லாது செய்ய நடவடிக்கை எடுத்தவர். இராணுவத்தினர் பலருடன் இவர் தொடர்பில் இருந்தவர்.நியாஸும் அவ்வாறு இருந்தார்.
கேள்வி:- இது என்ன கதை, தெளிவுபடுத்துங்கள்?
பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்கலாம். ஆமி மொய்தீன் என்பவரும் இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார். இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
கேள்வி:- இராணுவத்துடன் தொடர்பில் இருந்தனரா? எப்போதில் இருந்து?
பதில் :- ஆம் 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்தனர். அனைவருமா என்று தெரியாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார் .
கேள்வி:- நீங்கள் எந்த கட்சியில் அப்போது இருந்தீர்கள்?
பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தேன். கிழக்கில் பிரதான வேட்பாளராக களமிறங்கினேன்
கேள்வி:- சஹ்ரானின் அழைப்புக்கு செல்ல நீங்கள் தீர்மானிக்க அவருக்கு இருந்த பலம் என்ன?
பதில்:- வாக்கு பலம் தான்
கேள்வி:- நீங்கள் வாக்குகளை மட்டும் பார்த்தால் அவருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர் என நினைகிறீர்கள்?
பதில்:- இரண்டாயிரம் மூவாயிரம் வாக்குகள், அப்போது நான் மகிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன், அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டு இருந்தார். ஊரில் மூவாயிரம் வாக்குகள் உள்ளன என்றால் பலம் தானே? அதேபோல் அவர் நல்ல பேச்சாளர். ஆகவே அது பலம் தான்.
இதற்காக மட்டும் அல்ல இவரை தவிர வேறு வேறு அமைப்புகளுடனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத் அவர்களுடன் பேசினேன். பத்தாயிரம் வாக்குகள் உள்ளன. சூபி என்ற அமைப்பு உள்ளது. அவர்களிடம் ஆயிரம் வாக்குகள் உள்ளன. தாருல் என்ற அமைப்பு இவ்வாறு பல அமைப்புகள் உள்ளன. அவர்களிடம் பேசுவோம்.இது சாதாரண விடயம்.
கேள்வி:- சஹ்ரானுக்கு பாதுகாப்பு உதவி கிடைத்ததா?
பதில்:- ஆம், சஹ்ரான் எந்த சிக்கலும் இல்லாது அனைத்து சலுகைகளையும் பெறுவார். அவர்களுக்கு பொலிஸ் நெருக்கடி இருக்கவில்லை. அவர் வேறு முஸ்லிம் அமைப்புகளை விமர்சித்து ஒலிபெருக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்துவார்.
கேள்வி:- அப்படிஎன்றால் அவருக்கு அனுமதி கிடைக்குமா?
பதில்:- ஆம், சகல சலுகைகளையும் பெற்றார்.
கேள்வி:- அவர் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வையும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக வெறுப்புணர்வையும் ஏற்படுத்தினார். அப்படியா?
பதில்:- ஆம், அவர் மத ரீதியில் தாக்குதல் நடத்துவார். 2010-11 காலங்களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விடயங்களை கூறி ஒவ்வொரு குழுக்களில் இணைந்தார். அவர்களிடம் முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்களே நீக்கிவிடுவார்கள். பின்னர் அவராக ஒரு அமைப்பை உருவாக்கினார்.
ஒவ்வொரு வெள்ளியும் ஏனைய மதங்களை விமர்சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மதவாதியாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
]]>தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான தீவிரவாதி சஹ்ரான் ஹசீம் நடத்திய இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தீவிரவாதி சஹ்ரானின் விரிவுரைகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை முன்னிறுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அந்த காணொளியில் உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளு்ளது.
இதன்போது சஹ்ரான் மற்றும் அவரின் விரிவுரைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் சஹ்ரான் விளக்கமளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
]]>
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே தெற்காசிய வலய அமெரிக்காவின் அபிலாஷைகள் என்ற தொனிப்பொருளில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பிரதம பிரதி உதவி செயலாளர் Alice G. Wells இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,
‘தெற்காசிய வலயத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை மாத்திரம் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.
உலக சனத்தொகையின் ஒரு பகுதியான இந்திய, பசுபிக் வலயங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், வலயத்தின் நீண்ட கால எதிர்காலத்திற்கும் இந்த கொள்கை முக்கியமானதாகும்.
இந்து, பசுபிக் வலயத்தின் ஊடாகவே உலகின் 70 வீத வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் இராஜதந்திர செயற்பாடுகள், அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஊடாக தங்களின் சமுத்திரம் மற்றும் வான் மார்க்கத்தை பாதுகாக்க முடியும்.
அத்துடன், அமெரிக்காவின் நட்புறவு மற்றும் பங்காளர்களான இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் இந்து – பசுபிக் நாடுகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார சுயாதீன தன்மையை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்.
அதன் ஊடாக சுதந்திரம் மற்றும் சௌபாக்கியத்தை எட்டக்கூடிய வழியை ஏனையவர்களின் பங்களிப்பின்றி அவர்களால் அமைத்துக்கொள்ள முடியும்.
ஒழுக்கம் மற்றும் ஜனநாயக பண்புகள் அற்றுப்போன, நிலையற்ற அடிப்படை வசதிகளின் ஊடாக சுமக்க முடியாத கடனால் எமது பங்குதாரர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு சீனா அல்லது வேறு நாடுகளுக்கு இடமளிக்க மாட்டோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்காசிய வலயத்தின் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டமொன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த வருடம் தேவைப்படுவதாக இராஜாங்க திணைக்களம் அந்நாட்டு செனட் சபைக்கு அறிவித்துள்ளது.
இதன் ஊடாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன், பாதுகாப்பை அதிகரிப்பதற்கு வெளிநாட்டு இராணுவங்களுக்காக நிதி செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
]]>
இலவச ரயில் சேவையை வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலனினைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
]]>