//anjeng கவிதை – Mukadu https://www.mukadu.com Wed, 15 Jul 2020 22:41:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர். https://www.mukadu.com/2020/07/15/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/ Wed, 15 Jul 2020 22:41:41 +0000 http://www.mukadu.com/?p=25801
  • ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை
    நினைவுகூருவோம்.
  • ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்த மானந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
    மணக்க மணக்க வாயூறிடுமே
    குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே
    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமேஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்த மானந்தந் தோழர்களே
    கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

     

    ]]>
    என் செல்லக்கொலைகாரி.கவிதை வாகைகாட்டான் https://www.mukadu.com/2020/05/03/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4/ Sun, 03 May 2020 20:06:22 +0000 http://www.mukadu.com/?p=25739

    வெள்ளிக்கொலுசுகள்
    தாளமிட
    ததும்பத்ததும்ப தண்ணீர்க்குடம்
    சுமப்பவளின்
    பாதி நனைந்த பாவாடையிலிருந்து சொட்டும் துளிகள் பட்டதனால்
    மகிழ்ச்சியில் திழைக்கிறேனென
    மண்வாசத்தால்
    அறிவித்து கிடந்தது
    அந்தப் புழுதித்தெரு…

    வலக்கையால்
    படலையை பிடித்தபடி
    இடக்கையை இடையில் வைத்துக்கொண்டு
    நான் கடக்கும்
    நேரங்களிலெல்லாம்
    கண்களை ஆயுதமாக்கி
    சிரித்தபடி கொலை செய்யும்
    என் செல்லக்கொலைகாரி!

    அவள் வதனத்திலிருந்து
    உதிரும் புன்னகையில்
    சிதறும் பொற்பரல்கள்
    நட்சத்திரங்களாகும்
    அதிசயத்தை ரசிக்கத்தெரியாத
    சாபம் பெற்ற
    ஊரின் கண்ணுக்கு
    என் அதிசயக்காரி
    அட்டைக்கருப்பியாகவே
    இருந்துவிட்டு போகட்டும்…

    “சாம்போ நிறுவனங்கள்
    விளம்பரத்துக்காக
    வால் பிடித்து அலையும்
    உலக அழகிகளின்
    கூந்தலை வெல்ல
    என் ஊரிலும் ஒருத்தி
    இருக்கிறாளென
    அறைகூவல் விடுகிறேன் …

    குளித்த கூந்தல் அள்ளிமுடித்து
    கொண்டையிலொரு செம்பருத்தி சூடி
    பழமும் பூவும்
    இடைக்குமேலேந்தி
    அன்னமென நடந்து
    அயலிலுள்ள
    கோவிலுக்கு போகும் அவள்
    சிகிரியச்சுவரில்
    காசியப்பன்
    வரையத்தவறிய ஓவியம்.

    மண்வாசனை கவிஞர்

    வாகைக்காட்டான்

    ]]>
    ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்..ஓர் படைப்பாளியின் பார்வை https://www.mukadu.com/2020/04/07/%e0%ae%8a%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81/ Tue, 07 Apr 2020 22:14:35 +0000 http://www.mukadu.com/?p=25702 இணுவையூர் மயூரனின்…
    ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்

    கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் எனும் இக்கவிதைத்தொகுப்பு.

    மயூரன் தன் பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர். இவரை கவிஞர் மயூரன் என்பதை விட இணுவையூர் மயூரன் என்று சொல்வதில் தான் அவருக்கு ம் அவர் பிறந்த மண்ணுக்கும் பெறுமையே..

    தமிழ் இன உணர்வுடன் நம் மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையை கவிக்கண் கொண்டு ரசித்து வடித்த கவிதைகள் நன்று.

    இந்தச் சந்ததி காணாத வாழ்வு எனும் கவியும் தொலைந்தவை அல்ல தொலைத்தவை எனும் கவியும் படிக்கும் போது என் கண்கள் ஏனோ கண்ணீர் சுமக்கின்றன. எங்களுக்கும் சிறகுகள் முளைத்து சிட்டாக திரிந்ததொருகாலம் அந்த காலத்தை நினைவு படுத்தியது. ஆனால் எம் பிள்ளைகள் இங்கு கூண்டுக்கிளிகளாக வாழ்கிறார்கள்.என்ன தான் வசதிகள் இருந்தாலும் பொற்கூடும் சிறைதானே..? என்பதை மயூரன் கவிதையில் அழகாக கூறியுள்ளார்.

    சில கவிதைகளை வாசிக்கும் போது எங்கோ சில வார்த்தைகள் நம் மண்ணில் நாம் தொலைத்த வாழ்க்கையை சுட்டிக்காட்டி ஊசி இலை என் மனதையும் குத்துகிறது.

    நான் என்ற கவி மயூரன் தன்னை மற்றவர்களைவிட மாறுபட்டவன் என்று கூறுகிறார்.

    மயூரன் எழுதிய நாற்பது கவிதைகளும் அவரின் தாய்மண்ணை விட்டு அடையாளமின்மையின் சோகத்தையும் புலப்படுத்துகின்றன.

    மயூரனின் தமிழ்ப்பற்றைப் பறை சாற்றி நிற்கிறது அவரது கவிதைகள் அந்நூலுக்கு கவிகள் மட்டுமல்ல படங்களும் உருதிபடுத்துகின்றன.

    தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்தாக இருக்கட்டும்.

    ஒரு வாசகியாக உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துகின்றேன்.

    என்றும் அன்புடன்
    சிந்துகவி…?

    ]]>
    மழையோடு மண் விடியும். | கவிதை – தமிழ் சரண். https://www.mukadu.com/2019/06/01/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/ Sat, 01 Jun 2019 07:24:39 +0000 http://www.mukadu.com/?p=24516

    மழையோடு மண் விடியும்

    மழையோ டொரு புயலே நிதம்
    மண் மீதொரு பிழையே
    நிலமே எழு திசை யாவிலும்
    குளமே தரு மழையே

    எழு வானிடை விழுவான் கதிர்
    கரு மா முகில் எழவே
    தரு வானிடை முழுவான் திசை
    பெரு வானவில் எனவே

    நிரையாய் வரு மொரு நாளிலே
    அலையாய் கரும் முகிலே
    உலை யாய் நிதம் மழை யாகியே
    விரை வாய் வரும் தமிழே

    எரிவாய் தினம் மெழுகாய்
    நிதம் உலகால் ஒரு தவமே
    விரை வாய் எழும் தமிழால்
    வதம் புரியும் பெரும் பலமே

    நிலம் மீதினில் உறவாடிடும்
    சிறு வாலுடை நரியே
    பலமோ டொரு போராடிடும்
    பெரு வானுடை சனமே

    முளையா தொரு பயிராகியே
    விளையாதெனும் முடிவால்
    சளையாதிரு சமராடியே
    பயிராகிடும் பருவம்..

    ……கவிப்புயல் சரண்……

    நன்றி – தமிழ் சரண்

    01-06-2019

    ]]>
    புலிக்குணம் போகா தமிழர் தேசம் – (தமிழ் சரண்) https://www.mukadu.com/2019/02/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/ Mon, 25 Feb 2019 15:33:58 +0000 http://www.mukadu.com/?p=17298 புலிக்குணம் போகா தமிழர் தேசம் – (தமிழ் சரண்)

    தலைமை இல்லாத மக்கள் அல்ல
    இது தலைவன் வளர்த்த மக்கள்

    விதைத்தமை முளைக்கும் வரை அறுவடைக்கு காத்து இருப்போம்
    உழைக்கும் கரங்களாய் ..

    அரசியல் கடந்த மக்கள்
    அத்தனையும் எங்கள் பலமே

    #இதில்_அரசியல்_செய்தவர்கள்_எல்லாம்
    #எமை_பிடித்த_பீடைகள்_மட்டுமே!

    (தமிழ் சரண்)

    ]]>
    பருவமழியும் பாலகம்!-(வன்னியூர்- வரன்) https://www.mukadu.com/2019/02/21/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ Thu, 21 Feb 2019 04:43:53 +0000 http://www.mukadu.com/?p=16811 பருவமழியும் பாலகம்!

    அகரமறியும் அகவையிலிவன்
    ஆடு மேய்க்கிறான் – எதிர்
    காலம் தன்னைக் காடுகரம்பை
    நடந்து தேய்க்கிறான்.

    கற்பதற்கோ கறுப்புநோட்டு
    இல்லையென்பதால் – இவன்
    கால்கள் தேய கல்லும் முள்ளும்
    கடந்து திரிகிறான்.

    பெற்றவர்கள் எடுத்துக்கூறத்
    தவறிப் போவதால் – இவன்
    போலமண்ணில் எத்தனைபேர்
    தெருவில் அலைகிறார்.

    உற்றவர்கள் உடனிருந்தும்
    உதவத் தவறினால் – இவன்
    ஊரைவிட்டு உறவைவிட்டு
    ஒதுங்கி வாழுவான்.

    ஆட்டுமந்தை யோடிவனைக்
    கூட்டி விடுவதால் – நாளை
    காட்டுவாசி போலவாகி
    ரோட்டில் வாடுவான்.

    மாட்டு மேய்ப்பனாகி யின்று
    காட்டில் அலைவதால் – கை
    மாட்டி நாளை விலங்கினோடு
    நாட்டில் உலவுவான்.

    வாட்டுமிவன் வறுமைநாளை
    மாறிப் போகலாம் – அவன்
    வீட்டு நிலைமை வளமும்கூட
    மருவிப் போகலாம்.

    தேட்டமாகக் தேர்ந்தகல்வி
    ஊட்டத் தவறினால் – நாளை
    வீட்டு வாசல் வந்துகேள்வி
    கேட்டுப் பேசுவான்.

    உலகத்தோடு ஒத்துவாழ
    வழியைக் காட்டுங்கள் – இவன்
    உள்ளத்திலே கல்வியெனும்
    ஒளியை ஊட்டுங்கள்.

    கல்வியதன் அவசியத்தைச்
    சொல்லிக் காட்டுங்கள் – இவன்
    கறைபடியா உள்ளத்தில் நற்
    கருத்தை ஊட்டுங்கள்.


    – நன்றி –
    வன்னியூர்- வரன்
    20/02/2019

    ]]>
    தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது..கவிப்பேரரசு வைரமுத்து https://www.mukadu.com/2017/01/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88/ Sun, 29 Jan 2017 20:47:08 +0000 http://www.mukadu.com/?p=2241 வாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
    கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

    தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
    தலைமுறைக்கே வழிசொன்னீர்
    தமிழினத்தைக் கூட்டி

    அடையாளம் தொன்மங்கள்
    அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
    படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

    பீசாவும் பெப்சியுமே
    இளைஞர்கள் என்று – வாய்
    கூசாமல் சொன்னவரைக்
    கொன்றுவிட்டீர் கொன்று

    சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு – கடல்
    உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

    ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
    இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

    தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
    தண்ணீரில் வீழ்வதனால்
    வெயில்நனைந்தா போகும்?

    தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
    கருவிருந்து பெற்றாரின்
    கால்களுக்கும் வணக்கம்

    p6aa7.jpgசதுராடிக் களம்கண்ட
    சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
    எதிர்காலக் கருப்பைகள்
    நெருப்பைத்தான் சுமக்கும்

    காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
    நாளைகளை மீட்டெடுக்க
    நாணில்அம்பு பூட்டும்

    வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
    நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

    போராடிச் சாதித்துப்
    புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
    சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்.

    விகடன்

    ]]>
    வெட்கத்தைத் துற …கெளதமி யோ https://www.mukadu.com/2016/08/09/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1-%e0%ae%95%e0%af%86%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%af/ Tue, 09 Aug 2016 19:49:45 +0000 http://www.mukadu.com/?p=1872 13895201_314370352246813_2195912018878343095_n
    இந்தக் கடலைக் கடந்தாக வேண்டும்
    கொஞ்சம் வெட்கத்தைத் துற

    இந்த வானை கிழித்தே ஆக வேண்டும்
    கொஞ்சம் வெட்கத்தைத் துற

    இந்த முத்தத்தை கொடுத்தே ஆக வேண்டும்
    கொஞ்சம் வெட்கத்தைத் துற

    உடல் பெறுவது
    மொட்டவிழ்க்கும் வித்தை
    உள்ளம் பெறுவது
    மொட்டவிழும் வித்தை
    எங்கே கொஞ்சம் வெட்கத்தைத் துற

    எதை நான் துறப்பேன்
    அச்சத்தை?
    புனிதத்தை
    முதலில் என் வெட்கத்தைத் துறப்பேன்

    எதை நீ துறப்பாய் அன்பே?
    ரகசியத்தை?
    ராத்திரிகளை!
    இருக்கட்டும் முதலில் வெட்கத்தைத் துற

    மூக்கின் மேல் அமரும்
    செங்கோவங்களை
    மீசையில் அமர்ந்துறுத்தும்
    அந்த வெட்கத்தைத் துற

    இந்தக் காதலைக் கடந்தே ஆக வேண்டும்
    வெட்கத்தைத் துற!
    இந்த இச்சையைக் கடந்தே ஆக வேண்டும்
    வெட்கத்தைத் துற.

    ]]>
    பான் கீ மூனின் ருவாண்டா…கவிதை அகரமுதல்வன் https://www.mukadu.com/2016/08/08/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95/ Mon, 08 Aug 2016 11:50:39 +0000 http://www.mukadu.com/?p=1855 13924844_1055980201175533_745933893355279208_n
    எத்தனை பேரைக் கொல்ல முடிந்ததோ
    அத்தனை பேரையும் கொன்ற
    ஒப்பற்றதொரு பயங்கரம்
    உலக அமைதியின் வெள்ளைப் புறாக்களுக்கு
    கரணம் கற்பிக்கும்
    ஐ.நாவின் கைகளில்
    பல்லாயிரம் பாலச்சந்திரன்களின் விலா எலும்புகள்
    யுத்த வலயத்தில் ஊதிப்பெருத்த கால்நடைகளின்
    துர்நாற்றமே உலக அமைதி
    போர்க்காயங்களோடு மரவாளால் அறுக்கப்பட்ட
    உடற்பாகங்களின் இறைச்சியைப் போல்
    மேன்மையானது நந்திக்கடல்
    என் சவக்குழியின் மேல் சாட்சியமற்றுலவும்
    சர்வதேசக் கால்களை
    வீதியின் புழுதியைப் போல முள்ளிவாய்க்காலின் குடல்கள்
    மூடுகின்றன
    இறந்தவர்களை எண்ணிக்கையிடும்
    கொன்றவர்களின் புதியதொரு இழிவை
    உருமாறி நிகழ்த்தும் வினோத அக்கிரமத்தை
    பான் கீ மூனின் கண்கள் தயாரிக்கும்
    பொன்னிற மணலில் காயமறுக்கும்
    லட்ச மக்களின் ரத்தம்
    நீதிக்காய் முழங்கி
    போருக்காய் வெடிக்கும்
    அதுவொரு ஒப்பற்ற பயங்கரத்தை
    பழிவாங்கும்
    விடுதலையின்
    பேரலையாய் எழும்பும்.
    கடலை இரத்தமாக்கிய அநீதியை
    அலைகளால் கொல்லும்
    அடையாளமற்ற ஆயுதத்தை
    நாம் இன்னும் புதைக்கவில்லை.

    அகரமுதல்வன்
    07.08.2016

    ]]>
    நமக்கு ஊரில்லை. https://www.mukadu.com/2016/06/20/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/ Mon, 20 Jun 2016 19:32:21 +0000 http://www.mukadu.com/?p=1513 images
    நமக்கு ஊரில்லை
    ===============
    கொண்டாடட்டும்
    திருவிழாக்கடையில்லா
    திரு நாளிது
    வரவு கணக்கில்லா
    வரும் நாளிது!!

    துப்பாக்கி வெடி
    துரத்து மென்றால்
    தொட்டிலோடு போயிருக்கலாம்
    என்று தோணுது
    எதற்கு
    ஈர் ஐந்து விரல்கொண்ட
    பாதம்
    பட வைத்தாய்
    எம் மண்ணில்!

    யார் அகதிகள்
    அடைகாக்கயிருந்த
    தாய்ப்பறவைகள்
    குஞ்சுகளை விட்டு
    குடிபோனதால்
    நெஞ்சுகள் வீதியில்
    நிர்மூலமாகியதால்
    அகதியாய் போனவர்கள்
    யார்!

    ஐம்பத்தியாறு
    மேட்டுக்களில்
    கையிலும் வாயிலும்
    பூட்டுக்களோடும்
    பூனைபோல் நடமாடும்
    நரைத்த சாயம் கொஞ்சம்
    விறைத்த சாயம் கொஞ்சம்
    நாயாய் அகதிப்பாயாய்!

    சிரியா நோக்கி படையெடுப்பு
    சிதறின கொஞ்ச உயிரா?
    ஆப்கானில் அகலக்கால் மிதிப்பு
    அழிந்தது விழித்த கண்களே
    எல்லைக் கோடு கிழித்தயிடத்தில்
    முல்லைப் பூக்களும் கருகின!

    அகதி யென்ற சொல்லை
    முன் நெஞ்சிலும்
    பின் முதுகிலும்
    கூர்க்கம்பியிட்டு
    கொடியேற்றியது
    ஈழத்தமிழனின்
    இருப் பிழந்த பின்னே!

    மேகங் கலைந்துகொண்ட
    நேரம்
    விண்மீனை தேடிவந்த
    பனைங்குருத்து
    பள்ளிச்சிறார்கள்
    வெளித்தெரிந்த
    வேளையெல்லாம்
    இலைத் தழும்புகாட்டி
    விழுந்தோட வேகம்கொண்டார்
    அகதி ஓலைகளாய்!!

    அலைந்தாலும்
    பல நிலை கலைந்தாலும்
    நதிக்கும் ஓர் இடமுண்டு
    காய்ந்தாலும் பல
    இரவு பகல் கிடந்தாலும்
    நதியணைக்க ஓர் ஓடமுண்டு!!

    எமக்கு இல்லை
    கைக ஊன்றி எழுந்துநிற்க
    ஒரு கால்தடம் இல்லை
    சட்டையின் பொத்தான்
    அதிகமானால்
    களைந்து கொள்ள முதல்
    காலியான உயிர்களுமுண்டு!

    இந்த ஐரோப்பா
    வா என்று அழைத்தது
    வாய் திறக்காமல்
    வந்து நின்றவரெல்லாம்
    கொஞ்சக்காலம்
    தம் நிழலை தேடி
    தாடி வளர்த்தார்!

    ஐ நா மன்றத்தின்
    முன்பக்கம் மூங்கீல்தடி
    முறிந்து போகின்றது
    நிழலுக்கு ஒதுங்கியவர்
    கூரையை மேய்ந்ததால்
    அதனால் என்னவோ
    தடி செய்தவரெல்லாம்
    தரையில் நிற்கின்றார்!

    அகதி என்பது
    சொந்த நிலத்தை விட்டு
    துரத்தப்பட்டவர்தான்
    அகத்தில் தீயை சுமந்து
    எரிந்து கொண்டிருக்கின்றார்கள்
    சாமபல்களை உண்டபடி!

    ஈராக்கின் மிச்சம்
    ஈழத்தின் இறுதி கண்ணீர்
    சிரியாவின் முறிந்த சிறகு
    ஆப்கானிஸ்தானின் அலறல்
    ஐ நாவின் நாடகத்தில்
    விழுந்த பாத்திரங்கள்……
    ஈழநிலவன்

    ]]>