//anjeng
ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் சிறப்பான தரமான சம்பவம். அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டியாளர்களிடம் ” நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்? ” என்று கேட்க ” இருவருக்கும் பகிந்தளிப்போம் ” என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார். எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து தன் Sportsmanship யை நிருபித்தார் கத்தார் வீரர் பாஷிம்.

இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று.
பிரதி இணையம்
]]>
இத்தாலியின் லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் ஒலிம்பிக் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து 2021 ஆண்டின் உலகின் வேகமான மனிதராக இத்தாலியின்
லெமென்ட் மார்ஷல் ஜகொப் வலம் வருகிறார்.
அமெரிக்க ஃப்ரெட் கெர்லியை இரண்டாவது இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் வெண்கலத்தை வென்றார்.
கிரேட் பிரிட்டனின் ஜார்னல் ஹியூஸ் தவறான தொடக்கத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
உலக சாம்பியன் கிறிஸ்டியன் கோல்மேன் மற்றும் 2021 ல் உலகின் அதிவேக ட்ரேவோன் ப்ரோமெல் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை.
]]>
பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்
? எலெய்ன் தாம்ப்சன்-ஹேரா
? ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ்
? ஷெரிகா ஜாக்சன்
ஒலிம்பிக் சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றார் ஜமைக்காவின் எலெய்ன் தாம்ப்சன்-ஹேரா. 10.61 நொடிகளில் பந்தயத்தை முடித்தார். 2016 ஒலிம்பிக்கிலும் இவரே தங்கம் வென்றிருந்தார். இது அவருக்கு நான்காவது ஒலிம்பிக் பதக்கம் – 3 தங்கம், 1 வெள்ளி
34 வயதிலும் புயலெனப் பாயும் ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் (10.74sec) வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவருக்கு ஏழாவது ஒலிம்பிக் பதக்கம் – 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம். பங்கேற்ற 4 ஒலிம்பிக் தொடர்களிலும் பதக்கம் வென்றிருக்கிறார்
தன்னுடைய சிறப்பான டைமிங்கை (10.76) வெளிப்படுத்தி வெண்கலம் வென்றிருக்கிறார் ஷெரிகா ஜாக்சன். இது அவருக்கு மூன்றாவது ஒலிம்பிக் பதக்கம்
#Tokyo2020 #Jamaica
]]>
ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் தனது முதல் பதக்கத்தை
வென்றிருக்கிறது. இன்று நடைபெற்ற
60 கிலோவுக்கு குறைந்த பிரிவு ஜூடோ
போட்டியில் பிரான்ஸின் வீரர் லூகா
மெக்ஹாய்ட்ஸே(Luka Mkheidze) வெண்க
லப் பதக்கம் வென்று சாதனை படைத்தி
ருக்கிறார்.தன்னோடு மோதிய தென்
கொரியா வீரரைத் தோற்கடித்து மூன்றா
வது இடத்தை வென்றுள்ளார்.
“இந்த வெற்றியை மிக மிக மகிழ்வுடன் உணர்கிறேன். ஒலிம்பிக்கில் பங்குபற்றி
ஒரு பதக்கத்தை எடுத்துவரவேண்டும்
என்று சிறுபராயத்தில் கனவு கண்டேன்.
இன்று மூன்றாவது இடத்தை வென்றேன்
என்பதை இன்னும் நம்பமுடியாமல் இருக்
கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.
வீரர் லூகாவின் வாழ்வுக்குப் பின்னால்
பெரிய சோதனை இருக்கிறது.வெளிநா
ட்டினர் பலரைப் போலவே லூகாவும் தனது சிறு வயதில் ஓர் அகதியாகக் குடும்பத்துடன் பிரான்ஸுக்கு வந்தவர்.
ஜோர்ஜியா(Georgia) நாட்டில் 1996 இல் பிறந்த லூகா சிறுவனாக இருந்தபோதே ஜூடோ விளையாட்டில் அந்த நாட்டின் குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர். உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பம், வறுமை காரணமாக 2009 ஆம் ஆண்டு லூகா தனது தாயாருடன் அங்கிருந்து வெளி யேறி பெலாரஸ் நாடு ஊடாகப் போலந் தில் தஞ்சமடைய நேரிட்டது.அங்கு அகதி முகாம் ஒன்றில் தங்கி வாழ்ந்த லூகா குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.அத
னால் அங்கிருந்து பயண முகவர்களின் உதவியுடன் சட்டவிரோதமாகப் பிரான் ஸுக்குத் தப்பி வந்தனர்.
போலந்தில் தங்கியிருந்த போதும் பின்னர் பாரிஸின் புறநகரான Villeneuve-
Saint-Georges பகுதியில் வசித்த சமயத்தி
லும் தொடர்ந்து ஜூடோக் கலையை
விடாது பயின்று வந்த லூகா, பின்னர்
அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின்
பராமரிப்பில் பிரான்ஸின் லூ ஹாவ்
(Le Havre) நகருக்கு இடம்மாற நேர்ந்தது , அது அவரது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அங்கு அச்சமயம் மேயராக விளங்கிய முன்
னாள் பிரதமர் எத்துவா பிலிப்பின் (Edouard Philippe) உதவியால் 2015 இல் லூகா பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார். மேயர் பிலிப்பின்
சந்திப்பால் கிடைத்த அந்த உத்வேகத் துடன் விளையாட்டுக் கலையை விடாமல் தொடர்ந்து வந்த லூகா இன்று தனது புகலிட தேசத்துக்கு ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்று வழங்கியுள்ளார்.
நேற்று ஆரம்பமாகிய ஒலிம்பிக் போட்டி
களில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா
வென்றது. இலகு துப்பாக்கி சுடும் போட்
டியில் சீன வீராங்கனை யாங் கியான் (Yang Qian) முதல் தங்கத்தை வென்று
அந்தப் பெருமையைத் தனதாக்கினார்.
குமாரதாஸன்.
]]>கொரோனாக் கால ஒலிம்பிக் விழா
பார்வையாளரின்றித் தொடங்கியது
ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார்
ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன்
உலகப் பெருந்தொற்று நோய் காரண மாக ஓரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு, நடக்குமா, நடக்காதா என்ற நிச்சயமின் மைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுவந்த ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
ஒலிம்பிக் தீப்பந்தம் ஏற்றப்போவது யார் என்பதில் பேணப்பட்ட ரகசியங்களுக்கு
முற்றுப் புள்ளியாக க ஜப்பானின் பிரபல ரென்னிஸ் நட்சத்திரம் நயோமி ஒஸாகா (Naomi Osaka) தீபம் ஏற்றிவைத்தார்.23 வயதான நயோமி ஜப்பானிய தாய்க்கும் ஹெய்ட்டிநாட்டுத் தந்தைக்கும் பிறந்த கலப்பின ஜப்பானிய வீராங்கனை ஆவார்.
ஜப்பானிய தற்காப்புப் படைவீரர்கள்
தேசியக் கொடியை ஏற்றினர். நாட்டின்
உலகப் புகழ் பெற்ற பாடகி மிசியா(RnB singer Misia) தேசிய கீதத்தைப் பாடினார்.
ஜப்பானிய பேரரசர் நருஹிடோ(Naruhito)
ஒலிம்பிக் போட்டிகளை உத்தியோகபூர்வ
மாகத் தொடக்கி வைத்தார். அச்சமயம் அரங்கின் மேலே வாண வேடிக்கைகள்
ஒளிர்ந்தன.பேரரசர் நருஹிடோவுடன்
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக் (Thomas Bach) இருவரும்
மாஸ்க் அணிந்தவர்களாக கையசைத்து
வீரர்களை வரவேற்றனர்.
ஆரம்ப விழா அரங்கத்துக்கு மேலே
வானத்தில் சுமார் ஆயிரத்து 800
ட்ரோன்கள் பறக்கவிடபப்பட்டு அவற்றின் மூலம் விநோதமான வண்ணக் கோலங்
கள் காட்சிப்படுத்தப்பட்டன. இறுதியில் ஒளிரும் ட்ரோன்கள் ஒன்று சேர்ந்து பூமிப் பந்தின் வடிவத்தில் வானில் வட்டமாகத் தோன்றிய காட்சி காண்போரைக் கவர்ந் தது.
சுமார் நான்கு மணி நேரம் நீடித்த வாண வேடிக்கைகள், கண்காட்சிகள், அணி வகுப்புகளுடன் தொடக்க விழா நிறைவ
டைந்தது. உலகெங்கும் உள்ள ஒலிம்பிக்
ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக
அதனைக் கண்டுகளித்தனர். மிக எளிமையான ஒலிம்பிக் விழா என்று
ஊடகங்கள் இன்றைய தொடக்க நாளை
வர்ணித்துள்ளன.
இருநூறு நாடுகளினது விளையாட்டு
வீரர்கள் தத்தமது நாட்டுக் கொடிகளுடன்
அணிவகுத்துச் சென்றனர். மொத்தம் 11
ஆயிரம் வீரர்கள் ஜப்பானில் கூடியுள்ள
னர். ஆனால் சமூக இடைவெளி பேணல் காரணமாக அணிவகுப்புகளில் மிக அரி
தான எண்ணிக்கையானோரை மட்டுமே காண முடிந்தது. போட்டியாளர்களைத் தினமும் வைரஸ் சோதனை செய்வது, தனிமைப்படுத்தலுடன் பயிற்சியில் ஈடுபட வைப்பது என்று பல வித சுகாதார நடைமுறைகள் அங்கு மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவி
ருக்கின்ற நாடு என்ற ரீதியில் பிரான்ஸ்
அதிபர் மக்ரோனும் மற்றும் அமெரிக்க அதிபரது துணைவியார் ஜில் பைடன்
உட்பட ஒரு சில வெளிநாட்டுப் பிரமுகர்
களுமே இன்றைய தொடக்க விழாவில்
கலந்து கொண்டனர். எண்பது வீரர்கள்
அடங்கிய பிரெஞ்சு ஒலிம்பிக் விளையா ட்டு அணியினருக்கு அதிபர் மக்ரோன் அங்கு வைத்துத் தனது வாழ்த்துக்களை
தெரிவித்தார்.
உலகம் இன்னமும் ஒரு பெரும் சவாலை
எதிர்கொண்டு நிற்பதைத் தொடக்க நிகழ்வு பிரதிபலித்தது. இதற்கு முன்னர்
றியோ,லண்டன் நகரங்களில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டிகளது தொடக்க
நிகழ்வுகளில் காணப்பட்டது போன்ற பிராமாண்டம் இன்றைய விழாவில் தென்
படவில்லை. ஜப்பானிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் சேர்த்து ஆயிரத்துக்
கும் குறைவானவர்களே ரோக்கியோ
அரங்கில் கூடியிருந்தனர். அரங்கின் பெரும் பகுதி ஆசனங்கள் வெறுமையாய்
கிடந்தன. “ஒலிம்பிக்கை நிறுத்து” என்று
வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய
கோஷங்கள் உள்ளே எதிரொலித்தன.
நாடு பெரும் தொற்றுக்குள் சிக்கியுள்ள
நிலையில் 11 ஆயிரம் வெளிநாட்டு வீரர்
களை விளையாட அழைப்பது ஒலிம்பிக்
போட்டிக் களத்தை ஒரு பெரும் தீவிர தொற்றுப் பரப்பும் நிகழ்வாக (super- spreader event) மாற்றிவிடும் என்று கூறு
வோர் போட்டியை நடத்துவதற்குக்கடும்
எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
ஜப்பானில் கடைசியாக 1964 ஆம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ரோக்கியோவில் நடைபெற்றிருந்தன.
இன்று அங்கு ஆரம்பமாகியுள்ள 31 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து ஓகஸ்ட் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்
ளன.
குமாரதாஸன். பாரிஸ்.