இந்தியா – நேபாளம் எல்லைப்பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இந்தியா – நேபாளம் எல்லைப்பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இந்தியா – நேபாளம் எல்லைப்பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தில் 4.5 ரிக்டர் அளவு கொண்ட மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) 12:45 மணியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என இந்திய புவியியல் அறிவியல் அமைச்சகம் கீழ் இயங்கும் என்.சி.எஸ். தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net