இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட அசையும் சொத்துக்கள்!

இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட அசையும் சொத்துக்கள்!

இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட பொதுமக்களின் அசையும் சொத்துக்கள் தொடர்பான புகைப்படங்கள் சில இன்று வெளியாகியுள்ளது.

தனிநபர் ஒருவரின் புகைப்படக்கருவி ஒன்று மறுசீரமைக்கப்பட்ட போதே குறித்த புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 இறுதி யுத்தத்தின்போது இலங்கை முப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உக்கிரச்சமர் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்காண பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.

அத்துடன் பொதுமக்களின் அசையும் சொத்து , அசையா சொத்துக்கள் என அனைத்தும் அழித்து நாசமாக்கப்பட்டதுடன் பொதுமக்கள் நிர்க்கதியான நிலையில் அகதியாக்கப்பட்டனர்.

இவ்வாறு யுத்தத்தினால் அழிவடைந்த பொதுமக்களின் பெறுமதியான அசையும் சொத்துக்கள் தொடர்பான புகைப்படங்கள் காலம் கடந்த நிலையிலும் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2919 Mukadu · All rights reserved · designed by Speed IT net