ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; 5 CRPF வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் CRPF வீரர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் அவர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் அல்-உமர் முஜாயிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 5 CRPF வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 5 CRPF வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக CRPF வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

Copyright © 9975 Mukadu · All rights reserved · designed by Speed IT net