வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 8 கிலோ 640 கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் மறைத்து எடுத்துச் செல்லவிருந்த போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 கிலோ 140 கிராம் கேரளா கஞ்சாவுடன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த முகமட் இர்ஷாட் வயது 22 இளைஞனைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் கந்தசாமி பிரசாந்த் என்ற 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 8 கிலோ 640 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net