மகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா!

மகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா!

மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதால், வேதனையில் தாய் ஆசிட்டை குடித்து உயிரை மாய்துக்கொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா திட்டியதால் தற்கொலை செய்துக்கொண்ட மகள் ரோகிணி

மதுரை கே.புதூர் லூர்து அன்னை நகர் பகுதியில் தன் மகள் ரோகிணியுடன் வசித்துவந்தவர் தங்கம். கருத்து வேறுபாடு காரணமாகத் தன் கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்துவந்துள்ளார்.

ரோகிணி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்பதால் பள்ளிக்கு நான்கு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்கும் ரோகிணி, விடுமுறை என்பதால் அதிக நேரம் தூங்கியுள்ளார். இதனால் தாயார் தங்கம், ரோகிணியை வேலை பார்க்கச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரோகிணி, வீட்டின் இரண்டாம் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகள் இறந்த துயரம் தாங்காமல், தாய் தங்கம் வீட்டில் கழிவறை கழுவுவதற்கு வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இந்த நிலையில், தாய் தங்கம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம்குறித்து புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net