சிங்கள தேசிய கீதத்தால் தமிழ் முதல்வருக்கு ஏற்பட்ட கவலை!

சிங்கள தேசிய கீதத்தால் தமிழ் முதல்வருக்கு ஏற்பட்ட கவலை!

மட்டக்களப்பில்  நடைபெற்ற வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தனது கவலையினை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற வீடமைப்புதிட்டம் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடமுடியாத நிலையிருந்ததாகவும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த நல்லாட்சியிலும் தேசிய கீதம் தமிழர்கள் வாழும் பகுதியில் ஒரு மொழியில் பாடப்பட்டது கவலைக்குரிய விடயம் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

Copyright © 2131 Mukadu · All rights reserved · designed by Speed IT net