கப்பலின் முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி!

கப்பலின் முன்பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் மனைவி, பாதுகாப்பு எல்லையை மீறி கப்பலின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிவைத்துள்ளார்.

இந்த தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரின் மனைவி அம்ருதாவும் சென்றிருந்தார்.

இந்தநிலையில் அம்ருதா பட்னாவிஸ் பாதுகாப்பு எல்லை தாண்டி கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் அவர், அங்கு தொடர்ந்து செல்பி எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net