பாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு!

பாகிஸ்தானைவிட இலங்கை மிகவும் மோசமான நாடு!

பாகிஸ்தானை விட இலங்கை மிகவும் மோசமான நாடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானினால் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமானினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“எல்லைத்தாண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு பெருமளவான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

இவ்வாறான ஒரு செயலை பாகிஸ்தான் கூட தமிழக மீனவர்கள் மீது தொடுப்பதில்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும்.

இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், இலங்கை அரசங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கடல் தொழில் சட்டத்தை விலக்கி கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net