பா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு!

பா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு!

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அறிவிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைமை தலையிட்டு அவ்வாறு பேசவேண்டாம் என்று கூறிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும்.

அந்த இடத்தில் மாற்று அரசாக, முற்போக்கு அரசு அமர வேண்டும். தனிநபர்களுக்குச் சுதந்திரம் அளிக்கும் அரசாக, வரித் தீவிரவாதம் இல்லாத அரசாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசாக, விவசாயிகளின் நிலையை உயர்த்தும் அரசாக மத்தியில் அமர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் பதவி என்பது ஒரு பொருட்டு அல்ல. ராகுல் காந்தியும் பிரதமர் பதவி வேண்டும் என்று கூறவில்லை.

காங்கிரஸ் கட்சியும், எங்கள் கட்சியில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்றும் கூறவில்லை. எங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், எங்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net