நாகப்பாம்பின் பின்புறத்தில் இருந்த காட்சி!

நாகப்பாம்பின் பின்புறத்தில் இருந்த காட்சி..!: “நாய் குரைத்ததும் சென்று பின்புறம் பார்த்தேன்”

இந்தியா, கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ்.

இவருக்கு சொந்தமான கோப்பி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது.

இதனால் அப்பகுதிக்கு சென்று அவினாஷ் பார்த்துபோது, நாகபாம்பு ஒன்று நாய் முன் படம் எடுத்தபடி நின்றது. மேலும் பாம்பின் பின்புறத்தில் நெருப்புபோல் சிவப்பு வர்ணம் தெரிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவினாஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அவ்வர்ணம் போன்றொரு சிவப்பு வர்ணத்தை தான் இதுவரை பார்த்தது இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 5421 Mukadu · All rights reserved · designed by Speed IT net