வவுனியாவில் கஞ்சா செடிகளுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் கஞ்சா செடிகளுடன் இளைஞன் கைது!

வவுனியா, குடாக்கச்சக்கொடிய பகுதியில் 30 கஞ்சாச்செடிகளுடன் இருபது வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவராச்சியின் வழிநடத்தலில் மாமடு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ராஜகுரு தலைமையிலான குழுவினர் மாமடு குடாக்கச்சக்கொடியவில் உள்ள வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 30 கஞ்சா செடிகளை இன்று மீட்டுள்ளனர்,

அத்தோடு கஞ்சா செடியினை வளர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குடாக்கச்சக்கொடியை சேர்ந்த இருபது வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Copyright © 3074 Mukadu · All rights reserved · designed by Speed IT net