ஜனாதிபதியின் தீர்மானம் சரியானது!

ஜனாதிபதியின் தீர்மானம் சரியானது! அனைத்து மனுக்களை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குதமாறு சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்போடு தொடர்புடையதாக உள்ளதென சட்ட மா அதிபர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்டது.

அதற்கமைய சட்ட மா அதிபர் இந்த மனுக்களை நிராகரிக்கமாறு உயர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Copyright © 9843 Mukadu · All rights reserved · designed by Speed IT net