வரலாற்றில் இந்திய மத்திய அரசை ஆட்டங்காண வைத்த மாவீரர் நாள்!

வரலாற்றில் இந்திய மத்திய அரசை ஆட்டங்காண வைத்த மாவீரர் நாள்!

கடந்த 27ஆம் திகதி தேசிய மாவீரர் தின நாள் தாயத்தில் புலம்பெயர் நாடுகள் எங்கிலும் எழுச்சிப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் வரலாற்று சரித்திரமாக பதிவாகியுள்ளது.

வருடா வருடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக பிரம்மாண்டமான முறையிலும் பேரெழுச்சியுடனும் இந்த மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழினத்தின் மூத்த போராளியும் நான்கு மாவீரர்களின் தந்தையுமான பொன் தியாகம் அப்பா பல வருடங்களின் பின்னர் பொது வெளியில் முதன்மை சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

தன்னுடைய நான்கு பிள்ளைகளை ஈழ மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் மண்ணுக்காக கொடுத்த இந்த மூத்த போராளி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அருகாமையில் என்றும் மாவீரர்நாள் காலப்பகுதியில் அவரோடு சேர்ந்து விளக்கேற்றும் ஒருவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், பெருந்திரளான மக்கள் இந்த மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுக்கு சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 5214 Mukadu · All rights reserved · designed by Speed IT net