கிளிநொச்சியில் 1897 பேருக்கு வறட்சி நிவாரணம் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் 1897 பேருக்கு வறட்சி நிவாரணம் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் 1897 பேருக்கு வறட்சி நிவாரணம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி மற்றும் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது பாதிக்கப்பட்ட 8000இற்கும் மேற்பட்டோரை தெரிவு செய்து, அவற்றில் பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்களை சேர்ந்த 2400 பேருக்கான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Copyright © 3712 Mukadu · All rights reserved · designed by Speed IT net