பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை பலி

முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை பலியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான யானை சம்பவம் இடம்பெற்ற பகுதியிலேயே உயிருழந்த நிலையில் சடலமாக காணப்படுகிறது.

குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் கடந்தகாலங்களிலும் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net