ஒட்டுசுட்டான் விபத்தில் படுகாயமடைந்திருந்த மாணவன் மரணம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினருடன் ஒட்டுசுட்டான் சுற்றுவட்டவீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் எதிரே வந்துகொண்டிருந்த பஸ்ஸில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்திருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.
விபத்தில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று, இம்முறை க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய நாகராசா மதுசன் என்ற 16 வயதுடைய மாணவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.