//anjeng அம்பாறை காரைதீவு பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு. | Mukadu

அம்பாறை காரைதீவு பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு.

அம்பாறை காரைதீவு பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு.

கரையோர மாவட்டங்களில் ஈரமல்லா பேரலையின் கோரப்பசிக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நினைவு நாள் இன்றாகும்

சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர் நீத்த 14ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

காரைதீவு

14ஆம் வருட சுனாமி நினைவுதின நிகழ்வு காரைதீவு கடற்கரையில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடற்கரையிலுள்ள நினைவுத்தூபி முன்றலில் சுனாமி சுடர்கள் ஏற்றப்பட்டு விசேட பூஜை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து உயிரிழந்த உறவுகளால் கடலுக்குள் சென்று சுனாமி புஸ்பாஞ்சலி நிகழ்த்தப்பட்டுள்ளது.

காரைதீவு மீனவர் சமூகமும் இந்து சமய விருத்திச் சங்கமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

காரைதீவு பிரதேச செயலாளர் வெ.ஜெகதீசன், தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆலய பிரதம குருக்களான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ சாந்தருபன் ஜயா ஆகியோர் ஆத்மார்த்த பூஜைகளை நடத்தியுள்ளனர்.

பெருந்திரளான காரைதீவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net