வவுனியாவில் கடும் பனிமூட்டம்!

வவுனியாவில் கடும் பனிமூட்டம்!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.

எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத அளவிற்கு இன்று காலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது.

இதனால் வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஏ9 வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பனிமூட்டத்தால் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்து வருவதாக தெரியவருகிறது.

Copyright © 9338 Mukadu · All rights reserved · designed by Speed IT net